தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிடபொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசியக்கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தமுறை தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் எப்படியாவது பாஜக பலத்தை நிரூபிக்கவேண்டும் என பல்வேறு வியூகங்கை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல்பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் விகே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசாமிற்கு மத்தியஅமைச்சர் நரேந்திர தோமர், கேரளத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி, புதுவைக்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |