நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பகதா ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்கவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த போது, உத்தரப்பிரதேசத்தின் சவுரி சவுராவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல்நிலையத்தை தீவைத்துகொளுத்தினர். இதில் விவசாயிகள் மூவரும், காவல் துறையினர் 23 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படையாக திகழ்பவர்கள் விவசாயிகள் என்றும், சவுரிசவுரா நிகழ்வில் விவசாயிகளின் பங்கு மிகப் பெரியது என்றும்  தெரிவித்தார்.

கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிகளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். பட்ஜெட்டில் எளியமனிதரை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட வில்லை என்றும், நலவாழ்வு, உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...