வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1998 பிப்ரவரி 14-ம்தேதி கோவையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது: இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக,கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கைபார்த்தது திமுக. எனவே, திமுக, திக-வின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும்.

வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்தஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம் போட்டுள்ளவர்களின் போலிமுகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.

இந்தநிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, கேரள இந்து ஐக்கியவேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பேரூர்நொய்யல் ஆற்றங்கரையில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் சார்பில் திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...