தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் சசிகலா, தினகரனும் இணையவேண்டும் என்று கூறினார்.

நேற்று தமிழக சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் அவர் கூறியதாவது:

மத்திய அரசின், ‘ஜன் தன்’ திட்டத்தில், இதுவரை, 41.79 கோடி வங்கி கணக்கு துவக்கப்பட்டு, ஒருலட்சத்து, 37 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 1.11 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 2,865 கோடி ரூபாய் வங்கியில் உள்ளது. இதேபோல, இலவச காஸ் வழங்கும் திட்டத்தில், எட்டு கோடிக்கும் அதிகமான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழகசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றிபெறும்; முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கனவு நிச்சயம் நிறைவேறும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதிமுக.,வுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும்.

விவசாயிகளின் வருவாயை உயர்த்தவே, மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை, உடனடியாக கைவிடவேண்டும். தேவைக்கேற்ப இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, ஆலோசனை நடத்த முன்வர வேண்டும். இந்த ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...