மகிமைகள் பல செய்த நந்தகோபால நாயகி ஸ்வாமிகள்

மதுரை மேலமாசி வீதியில் உள்ளது நந்தகோபால நாயகி ஸ்வாமிகள் ஆலயம். 1853 ஆம் ஆண்டு நெசவானிகள் பிரிவைச் சேர்ந்த மதுரை சௌராஷ்டிரக் குடும்பதது திரு ரெங்க ஐயர் மற்றும் இலஷ்மி அம்மாளுக்குப் பிறந்தவர். அவருக்கு இராமபத்திரன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். சிறு வயது முதலேயே அவருக்கு ஆன்மீக நாட்டமே இருந்தது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்துக்குச் சென்று அங்கு முருகப் பெருமானின் சன்னதிக்கு எதிரில் இருந்த குகையில் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்தார்.

அங்கிருந்து பரமக்குடிக்குச் சென்று ஸ்ரீ நாகலிங்க அடிகளை தமது குருவாகக் கொண்டு அஷ்டாங்க யோகம் போன்ற சித்திகளை மிகக் குறைந்த நாளிலேயே பயின்று யோக வலிமை பெற்று சதானந்த சித்தர் எனப் பெயர் கொண்டார். அங்கிருந்து அவர் பல இடங்களுக்கும் சென்றார்.

ஒரு முறை சிவகங்கை மன்னன் அவருடைய தவ வலிமையை சோதிக்க அழகான பெண்ணை அவர் தனியாக இருந்த இடத்திற்கு அனுப்பினார். ஆனால் வந்தவளை ஸ்வாமிகள் சக்தி தேவியாகவே பார்க்க அவரை மயக்க வந்தள் காரியம் தோல்வி அடைந்தது. அதன் பின் ஸ்வாமிகளை மீண்டும் சோதிக்க அந்த மன்னன் ஒரு பாதாள அறையில் அவரை பூட்டி வைத்து மேல் பாகத்தை சிமெண்ட் போட்டு மூடினர். ஆனால் 45 ஆவது நாளில் ஸ்வாமிகள் தனது யோக வலிமையினால் அந்த பூமியை பிளந்து கொண்டு வெளியேறி விட்டார்.

மதுரையில் ஒரு இத்தில் படுத்து உறங்கியவர் மீது சூரிய ஒளி வழாமல் இருக்க அவர் தலை பக்கத்தில் ஒரு பாம்பு படமெடுத்து சூரிய ஒளிளை அவர் விழிக்கும் வரை தடுத்து நின்றதாம். அது போல ஒரு முறை திருடர்கள் அவரிடம் கொள்ளையடிக்கச் சென்றபோது அவர் அவர்கள் மீது விசிய மணலினால் கண்கள் குருடாயினர். இப்படியாக மகிமைகள் செய்து கொண்டு சென்றவர் கும்பகோணம், திருப்புவனம் போன்ற இடங்களில் பயணம் செய்தார். திருப்புவனத்தில் அவருக்கு ஒரு பெண்மணி பெண்கள் அணியும் உடையையும், நகைகளையும் பரிசாகத் தர அன்று முதல் அப்படிப்பட்ட உடைகளையே அணியத் துவங்க அவருடைய பெயர் நந்தகோபால நாயகி என ஆயிற்றாம்.

சௌராஷ்டிரத்தை சேர்ந்தவர் என்றாலும் சௌராஷ்டிரத்திலும் தமிழிலும் பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். பல இடங்களுக்கும் சென்று தாமே அவற்றைப் பாடியும் மகிமைகளையும் செய்து வந்தவர் முன்கூட்டியே தான் சமாதி அடையப்போகும் நேரத்தையும் நாளையும் கூறிவிட்டு அதன்படி 1914 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்.

அவர் விரும்பியவாறே அவரை மதுரை யோக நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் காதக் கிணரு என்ற பகுதியில் குழி தோண்டி அமர்ந்த நிலையிலேயே அதில் வைத்து மூடி சமாதி ஆலயமான பிருந்தாவனத்தை அமைத்தனர். அவரை சௌராஷ்டிர ஆள்வார் எனறே அழைத்துப் போற்றினர். அவருடைய ஆலயம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதியில் அமைந்து உள்ளது.

TAGS; மகிமைகள் ,நந்தகோபால நாயகி  ஸ்வாமிகள், துறவி ,துறவு , துறவிகளின் ஆன்மிக வாழ்க்கை , துறவிகள்  துறவிகளும் வந்தனர் , துறவிக்கு வேலை , துறவியாக விருப்பம்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...