மகிமைகள் பல செய்த நந்தகோபால நாயகி ஸ்வாமிகள்

மதுரை மேலமாசி வீதியில் உள்ளது நந்தகோபால நாயகி ஸ்வாமிகள் ஆலயம். 1853 ஆம் ஆண்டு நெசவானிகள் பிரிவைச் சேர்ந்த மதுரை சௌராஷ்டிரக் குடும்பதது திரு ரெங்க ஐயர் மற்றும் இலஷ்மி அம்மாளுக்குப் பிறந்தவர். அவருக்கு இராமபத்திரன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். சிறு வயது முதலேயே அவருக்கு ஆன்மீக நாட்டமே இருந்தது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்துக்குச் சென்று அங்கு முருகப் பெருமானின் சன்னதிக்கு எதிரில் இருந்த குகையில் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்தார்.

அங்கிருந்து பரமக்குடிக்குச் சென்று ஸ்ரீ நாகலிங்க அடிகளை தமது குருவாகக் கொண்டு அஷ்டாங்க யோகம் போன்ற சித்திகளை மிகக் குறைந்த நாளிலேயே பயின்று யோக வலிமை பெற்று சதானந்த சித்தர் எனப் பெயர் கொண்டார். அங்கிருந்து அவர் பல இடங்களுக்கும் சென்றார்.

ஒரு முறை சிவகங்கை மன்னன் அவருடைய தவ வலிமையை சோதிக்க அழகான பெண்ணை அவர் தனியாக இருந்த இடத்திற்கு அனுப்பினார். ஆனால் வந்தவளை ஸ்வாமிகள் சக்தி தேவியாகவே பார்க்க அவரை மயக்க வந்தள் காரியம் தோல்வி அடைந்தது. அதன் பின் ஸ்வாமிகளை மீண்டும் சோதிக்க அந்த மன்னன் ஒரு பாதாள அறையில் அவரை பூட்டி வைத்து மேல் பாகத்தை சிமெண்ட் போட்டு மூடினர். ஆனால் 45 ஆவது நாளில் ஸ்வாமிகள் தனது யோக வலிமையினால் அந்த பூமியை பிளந்து கொண்டு வெளியேறி விட்டார்.

மதுரையில் ஒரு இத்தில் படுத்து உறங்கியவர் மீது சூரிய ஒளி வழாமல் இருக்க அவர் தலை பக்கத்தில் ஒரு பாம்பு படமெடுத்து சூரிய ஒளிளை அவர் விழிக்கும் வரை தடுத்து நின்றதாம். அது போல ஒரு முறை திருடர்கள் அவரிடம் கொள்ளையடிக்கச் சென்றபோது அவர் அவர்கள் மீது விசிய மணலினால் கண்கள் குருடாயினர். இப்படியாக மகிமைகள் செய்து கொண்டு சென்றவர் கும்பகோணம், திருப்புவனம் போன்ற இடங்களில் பயணம் செய்தார். திருப்புவனத்தில் அவருக்கு ஒரு பெண்மணி பெண்கள் அணியும் உடையையும், நகைகளையும் பரிசாகத் தர அன்று முதல் அப்படிப்பட்ட உடைகளையே அணியத் துவங்க அவருடைய பெயர் நந்தகோபால நாயகி என ஆயிற்றாம்.

சௌராஷ்டிரத்தை சேர்ந்தவர் என்றாலும் சௌராஷ்டிரத்திலும் தமிழிலும் பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். பல இடங்களுக்கும் சென்று தாமே அவற்றைப் பாடியும் மகிமைகளையும் செய்து வந்தவர் முன்கூட்டியே தான் சமாதி அடையப்போகும் நேரத்தையும் நாளையும் கூறிவிட்டு அதன்படி 1914 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்.

அவர் விரும்பியவாறே அவரை மதுரை யோக நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் காதக் கிணரு என்ற பகுதியில் குழி தோண்டி அமர்ந்த நிலையிலேயே அதில் வைத்து மூடி சமாதி ஆலயமான பிருந்தாவனத்தை அமைத்தனர். அவரை சௌராஷ்டிர ஆள்வார் எனறே அழைத்துப் போற்றினர். அவருடைய ஆலயம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதியில் அமைந்து உள்ளது.

TAGS; மகிமைகள் ,நந்தகோபால நாயகி  ஸ்வாமிகள், துறவி ,துறவு , துறவிகளின் ஆன்மிக வாழ்க்கை , துறவிகள்  துறவிகளும் வந்தனர் , துறவிக்கு வேலை , துறவியாக விருப்பம்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...