உடுப்பி மாவட்டம் கார்காலவை நினைவு கூர்ந்த அண்ணாமலை

உடுப்பி மாவட்டம் கார்கலாவை நினைவு கூர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், ‘உங்களை நேசித்த எங்களை ஏன் விட்டு சென்றீர்கள்’ என மாநில மக்கள், ‘இன்ஸ்டாகிராம்’ எனும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

‘கர்நாடகாவின் சிங்கம்’ என்று அழைக்கப்பட்டவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலை. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்த பின், தமிழகத்துக்கு சென்று விவசாயம் செய்து கொண்டிருந்தார்.

பின், பா.ஜ.,வில் இணைந்து மாநில துணைத்தலைவராக பதவி வகித்தார். அப்போது தலைவராக இருந்து முருகன், மத்திய அமைச்சர் ஆன பின், அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் நியமிக்கப்பட்டது முதல், ஆளும் கட்சியினருக்கு ‘சிம்ம சொப்பனமாக’ இருந்து வருகிறார். தமிழக எதிர்க்கட்சி பா.ஜ., அல்லது அ.தி.மு.க.,வா என்று கேள்வி எழுப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

நான் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பயிற்சி முடித்த பின், எனக்கு முதல் போஸ்டிங், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கார்கலாவில் கிடைத்தது. சிறிய நகரமான அங்கு, நான் சென்றதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அங்குள்ள மக்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் குணாதிசயங்கள் மிக சிறந்தது.

அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்; பண்பட்டவர்கள். இவை அனைத்தும் என்னை ஒரு மனிதனாக வடிவமைத்தன. ஆரம்பத்தில் கார்கலாவின் ஏ.எஸ்.பி.,யாக ஓராண்டு, எட்டு மாதங்கள் பணியாற்றினேன்.

அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மாவட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக, அம்மக்கள், என்னை அங்கேயே எஸ்.பி.,யாக வைத்திருக்க முயன்றனர்.

நான் மீண்டும் எஸ்.பி.,யாக பதவியேற்று, இரண்டரை ஆண்டுகள் அங்கேயே இருந்தேன். இதன் மூலம் கார்கலா, உடுப்பியில் என மொத்தம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன்.

அங்குள்ள மக்கள் ஏழைகள். அவர்களில் ஒருவனாக என்னை அவர்கள் நினைத்ததால், சிலர் நில தகராறு இருக்கிறது; தீர்த்து வையுங்கள் என்று என்னிடம் வருவர். கடற்கரை பகுதி மக்கள், மிகவும் மதப்பற்று மிக்கவர்கள். நான் கடவுள் மீது பயம் உள்ளவன்.

மதத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். ‘காந்தாரா’ மூலம், கடற்கரை மக்களின் வழிபாடு, உலகளவில் பிரபலமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு உடுப்பி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்கள் அனைவரும் பதில் அளித்துள்ளனர்.

இணையவாசி ஒருவர், ‘நானும் கார்கலாவை சேர்ந்தவன் தான். நீங்கள் அங்கு இருந்தபோது, நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். நீங்கள் எங்கு பேசினாலும், நான் அதில் கலந்து கொண்டிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு இணையவாசி, ‘உங்களை இவ்வளவு நேசித்த கர்நாடக மக்களை ஏன் வீட்டு சென்றீர்கள். கார்கலாவில் நீங்கள் இருந்த போது, குற்றச்சம்பவம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல’ என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...