மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம்

மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மே.வங்கத்தில் அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது.

மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறும் மே.வங்கதேர்தல் அறிவிப்புக்கு பிறகு பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 800 கூட்டங்கள் நடத்த பாஜக முடிவுசெய்துள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்தியஅமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவின் பிற தேசிய தலைவர்களின் கூட்ட எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக திட்டமிடபட்டுள்ளது.

இதுகுறித்து  பாஜக தேசியநிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “மேற்கு வங்க வெற்றியின் மூலம் இந்திபேசாத மாநிலங்களில் எங்கள் கட்சியின் முதல் வெற்றியாக அது அமையும். எனவே, பிரதமர் மோடி உட்பட அனைவருமே தேவைக்கு ஏற்ப கூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளனர். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை அழைக்கஉள்ளோம்” என்று தெரிவித்தனர்.

தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் இந்திபேசாத மாநிலங்கள் ஆகும். அசாம் தவிர மற்ற நான்கிலும் பாஜக ஆட்சி செய்ததில்லை. எனவே, இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு பெரும்சவாலாக உள்ளது.

அசாமில் 2-வது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி 7 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மற்ற 3 மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரேநாளில் மூன்று கூட்டங்கள் நடத்தும் திட்டத்துடன் 5-க்கும் மேற்பட்டமுறை பயணம் மேற்கொள்கிறார் மோடி.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் 5 மாநிலங்களில் பிரச்சாரம்செய்ய உள்ளனர். இதில் உ.பி.முதல்வரான யோகி ஆதித்யநாத் அதிககூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர் முதல்முறையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துகொள்ள திட்டமிடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...