ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க சார்பில் திருச்சியில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்ட பேரவை தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்ள கூட்டிய கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தி.மு.கவினர் பொதுக்கூட்டதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுக அடுத்த 10 ஆண்டுகள் செய்யக்கூடிய திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். அதில், ஏழுமுக்கிய துறைகளில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் ஸ்டாலின் விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வெளியிட்டதிட்டங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் வெளியிட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000ரூ ஊதியம் என்பதை “நான்தாரேன் ஆயிரம்” என்றும், 50 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 1 கோடிபேரை வறுமைக்கோட்டுக்கு மேல்கொண்டு வருவோம் என்பதை, செயல்கோட்டிற்கு மேல் கொண்டுவருவோம் என்றும், டிஜிட்டல் தற்சார்பு கிராமங்கள் என்பதை பிராட்பேண்ட் (broadband) என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளதாக மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

ஸ்டாலின் தெரிவித்த உறுதி மொழிகள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டது

என்றும் “ஸ்டாலின் அவர்களுக்கும் நாங்கள் தான் சொல்லி கொடுக்கிறோம், நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால், ஒன்றிணைவோம் வா என்று சத்தமில்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வருகிறது என்று கமல்ஹாசன் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மேடை அமைத்து பிரச்சாரம்மேற்கொண்ட ஸ்டாலின், அந்த மேடையின் அளவு, அமர வேண்டிய இடம், இருக்கைகள், அக்கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் யார், பேச வேண்டிய அம்சங்கள் என்ன, யாரையெல்லாம் பாராட்டவேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுத்தினார். ஆனால், மக்கள் பிரச்சனைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறியாதது அக்கட்சியின் 50 ஆண்டுகால அரசியலை கேள்வி குறியாக்கியுள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சமுதாயத்தினர் இருக்கிறார்கள், அவர்களின் ஓட்டுவங்கி எவ்வளவு என அலசி ஆராய்ந்த ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளை குறித்து அறியாமல் ஊர்ஊரக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றும், மூன்றாவது அணிவெளியிட்ட நலத்திட்டங்களை ஸ்டாலினும் வெளியிட்டது ஸ்டாலினின் மிகப் பெரிய தேர்தல் சொதப்பல் என்று தி.மு.கவினரே நொந்தபடி தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...