திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பா.ஜ.,வில் இணைந்தார்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வரும்சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படாததால், அதிருப்தி அடைந்தவர் இன்று (மார்ச் 14) பா.ஜ.,வில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ., டாக்டர் சரணவன், அக்கட்சியின் மருத்துவ அணியின் மாநிலநிர்வாகியாக இருந்தார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார். நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால், மதுரைமாவட்ட திமுக., கோஷ்டிபூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியை, அக்கட்சி விரும்பி கேட்காமலேயே, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதியும் தளபதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்திஅடைந்த டாக்டர் சரணவனின் ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இனி நீடிக்கவேண்டாம்; நம்ப வைத்து கழுத்தை அறுத்த கட்சியான திமுக.,வை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிடுவோம் என, வலியுறுத்தினர்.

இதனையடுத்து டாக்டர் சரவணன், தனக்கு பா.ஜ., மேலிடத்தில் உள்ள நெருக்கமான நண்பர்கள் வாயிலாக, இன்று அக்கட்சியின் மாநிலதலைவர் முருகன் தலைமையில் பா.ஜ., வில் இணைந்தார். அவர் பா.ஜ., தலைமை அலுவலகம் சென்று பா.ஜ., மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...