உங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் வலியை என்றாவது உணர்ந்தீர்களா

மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக குடும்பத்தினரின் வலியை மம்தா என்றாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க் கட்சியான பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

பன்குரா மாவட்டத்தில் உள்ள ராணி பந்த் நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால், நிச்சயமாக 7-வது ஊதியக் குழுவை அரசு ஊழியர்களின் நலனுக்காக அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன்.

தீதி (மம்தா) உங்கள் காலில்காயம் ஏற்பட்டபோது, நீங்கள் வலியை உணர்கிறீர்கள். உங்களின் காயம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால், 130 பாஜக தொண்டர்களை உங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கொலைசெய்தார்களே, அந்த 130 பாஜக தொண்டர்களின் தாய்மார்களின் உணர்வுகளை, வலியை, வேதனையை உணர்ந்திருக்கிறீர்களா. அந்த வலியை உணர ஏதாவதுமுயற்சி எடுத்திருக்கிறீர்களா?

பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அடைந்தவேதனையை ஒருபோதும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாகத் தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களித்து சரியான பதிலடியை உங்களுக்கு வழங்குவார்கள்.

பாஜக ஆட்சிக்குவந்தால், மாநிலத்தில் உள்ள பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பழங்குடியினச் சான்றிதழ் வழங்குவதற்குக்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் கேட்கிறார்கள். ஆனால், பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கிறோம். அவர்களின்கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவை மீது கவனம் செலுத்தப்படும். இதை நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம்”.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...