பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும்

பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ்விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் எரிபொருட்கள் மீதானவரியை குறைத்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலை உயர்ந்ததால், இந்தியாவும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது, ஆனால் இது தற்காலிகமானது.

அவை (எரிபொருட்கள் விலை) படிப்படியாக குறையும். விலையைகுறைக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் நாங்கள் பேசிவருகிறோம். எரிபொருட்கள் மீதான இந்தவரிகள் வளங்களாகும், பொருளாதாரத்தை புதுப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவுகிறது குறிப்பாக கோவிட்-19 உருவாக்கிய சூழ்நிலையில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையைகுறைப்பது தொடர்பாக அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநில அரசுகளும், மத்திய அரசும் கலந்துரையாட வேண்டியவிஷயம். ஏனென்றால் பெட்ரோல் விலையில் மத்திய அரசின்வரிகள் மட்டுமல்ல, மாநில அரசுகளும் கட்டணம் வசூலிக்கின்றன. மத்திய அரசு வருவாய் பெறும்போது, அதில் 41 சதவீதம் மாநில அரசுகளுக்குசெல்கிறது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...