காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசுஅரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார்.
வெற்றி வேல், வீரவேல் என தமிழில் முழக்கமிட்டு பிரதமர் மோடி தனது பிரசார உரையைத் தொடங்கினார்.
இதில் அவர் பேசியதாவது, தமிழகத்தின் மிகப்பழமையான நகரத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கியநாடுகள் சபையிலும் தமிழில் சில உதாரணங்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைக் கொள்கிறது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் லட்சியம் நான். சமுதாயத்திலுள்ள விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் நலனுக்கான பாடுபடுவேன்.
தேவேந்திர குலவேளாளர் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். தாய் மொழியில் மருத்துவக் கல்வி, தொழிற்கல்வியை வழங்க மத்திய அரசு விரும்புகிறது.
காங்கிரஸ் – திமுகவை பொருத்த வரை வாரிசு அரசியல்தான் நோக்கமாக உள்ளது. திமுக, காங்கிரஸ் தலைமைகள் தங்களது நிர்வாகிகளை கட்டுப் படுத்தி வைக்கவேண்டும்.
தமிழக முதல்வரின் தாயாரை திமுக பிரமுகர் அவமதித்துள்ளார். பெண்களை அவமதித்தவர்கள் மீது எந்தநடவடிக்கையும் அக்கட்சி எடுக்கவில்லை. ஒருவேளை மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவரும் அவமதிக்கப் படுவார்கள். பெண்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அவர்களால் முடியாது.
திமுகவின் வாரிசுக்காக அக்கட்சியில் பலதலைவர்கள் புறக்கணிக்க பட்டுள்ளனர். பெண்களின் கண்ணியத்தைக் காக்க கிராமப் புறங்களில் பாஜக அரசால் பலகழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |