சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்

ஒடிசா முன்னாள்முதல்வர் எழுதிய ‘ஒடிசா இதிகாசம்’ என்ற நூலின் இந்தி மொழிபெயர்ப்பு பதிப்பை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘உத்கல்கேசரி’ ஹரேகிருஷ்ணா மஹதாப், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1946 முதல்1950 வரை மற்றும் 1956 முதல் 1961வரையில் ஒடிசா முதல்வராக பதவிவகித்துள்ளார். மாநில வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் ஆவார்.இவர் எழுதிய ஒடிசா இதிகாசம் என்ற நூல் இது வரை, ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்துவந்தது. இந்நிலையில் இதன் இந்திமொழி பதிப்பை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிஜு ஜனதாதளம் எம்.பி.யும் ஹரேகிருஷ்ணாவின் மகனுமான பர்த்ருஹரி மஹதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியபங்கு வகித்ததற்காகவும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காகவும் ஹரே கிருஷ்ணா மக்களால் என்றென்றும் நினைவுகூரப் படுகிறார். மாநில கலாச்சாரத்தை வளர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஹரே கிருஷ்ணாவின் 120-வது பிறந்த நாளை கொண்டாடினோம். இன்று அவர் எழுதிய புகழ்பெற்ற நூலின் இந்திமொழி பதிப்பை வெளியிடுகிறோம். ஒடிசாவின் வரலாறுபற்றி நாட்டுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.எனவேதான் அவரது நூல் இந்தியில் வெளியிடப்படுகிறது.

இப்போது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம். அப்போது தான் அதைப்பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், உணரவும் முடியும். மேலும் புதிய நம்பிக்கையுடன், ஏதாவது செய்யவேண்டும் என்ற புதிய தீர்மானங்களை நோக்கி இளைஞர்கள் முன்னேறிச் செல்லவும் உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...