பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண்

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவில் உள்ள சுந்தர்கர்க் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சிவப்பு நிற ஆடை அணிந்தபடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை முகாமில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில பா.ஜ., துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய்பாண்டாவிடம் சென்றுள்ளார். தாம் கையில் வைத்திருந்த 100 ரூபாயை அவரிடம் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, அவரிடம் இந்த ரூ.100ஐ வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பழங்குடியின பெண்ணின் இந்த செயலைக் கண்டு வியந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா இந்நிகழ்வை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விரிவாக பதிவிட்டு உள்ளார். பழங்குடியின பெண் ரூ.100 தரும் போட்டோவையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்.

தமது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி இருப்பதாவது; ஒடிசா சுந்தர்கர்க் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ஒடிசா ஆதிவாசிப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமரிடம் தருமாறு கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் கூறுமாறு தெரிவித்தார்.

அந்த பணத்தை நான் வேண்டாம் என்று கூறி விளக்கினேன். ஆனால் அப்பெண்மணி அதை மறுத்துவிட்டார். பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவே இல்லை. இதுதான் ஒடிசா மற்றும் பாரதம் உணரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஜெய் ஜெகன்நாத் என்று பதிவிட்டுள்ளார்.

பைஜெயந்த் ஜெய்பாண்டாவின் வலைதள பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:

இந்த அன்பு என் உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது. எப்போதும் ஆசிர்வதிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். உங்களின் ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு தருகிறது.

இவ்வாறு தமது பதிவில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...