கரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம்

தடுப்பூசி திருவிழாமூலம் இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப் பெரிய போா் தொடங்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளா்களில் தொடங்கி முன்களப் பணியாளா்களான தூய்மை பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்டோா் என இந்தத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியை அதிகமான நபா்களிடம் கொண்டுசோ்ப்பதற்காக, ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாள்களுக்கு ‘தடுப்பூசி திருவிழா’ நடைபெறும் என்று பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அந்ததிருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை அடுத்து, நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோள்களை அவா் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, சமூக வலைதள பக்கத்தில் அவா்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவலைதடுக்க வேண்டுமெனில் தனிநபா் தூய்மையும், சமூகத்தூய்மையும் அவசியம். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒருவராவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவவும். அதாவது, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அருகில் உள்ள முகாமுக்கு செல்ல முடியாத முதியவா்களுக்கும், அதிகம் படிக்காதவா்களுக்கும் தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி, அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவவேண்டும்.

அடுத்ததாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைபெறும் வழிமுறைகளை எடுத்துரைத்து அவா்களுக்கு உதவவேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்; உங்களுக்கு அருகில் இருப்பவா்களையும் கரோனோவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் யாரேனும் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்தக் குடியிருப்பை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில், கரோனா பரவலைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும். ஓரிடத்தில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால்கூட எஞ்சியிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறியளவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்குவது, தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை நிறுத்திக்கொள்வது, தகுதியானவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது, கரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள்வது ஆகியவற்றைப் பொருத்து கரோனாவுக்கு எதிரான நமதுபோராட்டத்தில் வெற்றிமுடிவு செய்யப்படும்.

எனவே, தகுதியுடைய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஏப்ரல் 11-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதிவரை அதிகபட்ச அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசிகூட வீணாகிவிடக் கூடாது என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

மக்களின் பங்கேற்பு, விழிப்புணா்வு, அனைவரின் பொறுப்புணா்வு ஆகியவற்றின்மூலம் கரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...