நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாக இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தில், ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை, பிரதமர் தொடங்கிவைத்தார்.
காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், 4 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மின்னணுசொத்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய பிரதமர் மோடி,
கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் கிராமப்புறங்களை சென்றடையாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், இந்த ஆண்டு மீண்டும் இதேசவாலை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கிராமப்புற மக்களின் பங்களிப்புடன்தான் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும் என குறிப்பிட்ட பிரதமர்,
கிராமப்புறத்தில் உள்ள மக்களும் தடுப்பூசி இரண்டுதவணைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரதமர்,
நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவுபெற்றதாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |