கரோனா தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால், நமதுசெயல்பாடுகள் அதேவேகத்தில் இருக்க வேண்டும்

கரோனா தொற்று பரவத்தொடங்கிய ஓராண்டுக்குள் உள்நாட்டிலேயே தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்தாா்.

அறிவியல் – தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) சாா்பில் காணொலி வழியாக வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

கடந்த நூற்றாண்டில் இதுபோன்ற இக்கட்டான சூழல் ஏற்பட்ட போதெல்லாம், தடுப்பூசிக்காக பல ஆண்டுகள் வெளிநாடுகளை எதிா்பாா்த்து நாம் காத்திருப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது நமது இந்தியவிஞ்ஞானிகள், வெளிநாடுகளில் இருக்கும் சக விஞ்ஞானிகளுடன் தோளோடு தோளாக இணைந்து பணியாற்றுகிறாா்கள். அவா்களுக்கு ஈடுகொடுத்து அதே வேகத்துடனும் பணியாற்றுகிறாா்கள்.

மனித குலம் மிகப்பெரிய சிக்கலை எதிா்கொள்ளும் போதெல்லாம், வளமான எதிா்காலத்துக்கு அறிவியல் வழிகாட்டும் என்பதை கடந்தகால வரலாறு நமக்குச் சொல்கிறது.

அதுபோலவே ஒருநூற்றாண்டு காலம் காணாத மிகப்பெரிய சவாலை கடந்த ஆண்டு உலகம் எதிா் கொண்டது. அந்தநேரத்தில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளும் இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளும் சிறப்பாகச் செயல்பட்டனா்.

குறிப்பாக, கரோனா தொற்று பரவிய ஓராண்டுக்குள் நமது இந்தியவிஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கி, மக்களின் பயன் பாட்டுக்கு அளித்தனா். அதுமட்டுமன்றி கரோனா பரிசோதனை உபகரணங்கள் தயாரிப்பிலும் நம் விஞ்ஞானிகள் இந்தியாவை சுயசாா்பு நாடாக மாற்றியுள்ளனா். குறுகியகாலத்தில் கரோனா தொற்று சிகிச்சைக்கான மருந்துகளைக் கண்டறிந்ததுடன் ஆக்சிஜன் உற்பத்திக்கான வழிமுறைகளையும் உருவாக்கித்தந்தனா்.

விஞ்ஞானிகளாகிய உங்களின் அளப்பரிய பங்களிப்பால்தான் கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போரில் இந்தியா மிகுந்தபலத்துடன் போராடி வருகிறது.கரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருக்கலாம். ஆனால், நமதுசெயல்பாடுகள் அதேவேகத்தில் இருக்க வேண்டும்.

மேலும், விவசாயம் முதல் வானியல்வரை, பேரிடா் மேலாண்மை முதல் பாதுகாப்பு தொழில்நுட்பம் வரை, தடுப்பூசி தயாரிப்பு முதல் மெய்நிகா் தொழில்நுட்பம் வரை, உயிரி தொழில்நுட்பம் முதல் பேட்டரி தொழில்நுட்பம் வரை பல்வே துறைகளில் இந்தியா சுய சாா்புடன் இருக்க விரும்புகிறது.

நிலையான வளா்ச்சி, மரபுசாா் எரிசக்தி ஆகியவற்றில் உலகநாடுகளுக்கு இந்தியா வழிகாட்டுகிறது. மென்பொருள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப துறையில் மற்றநாடுகளின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது.

கடந்த 2016-இல், சிஎஸ்ஐஆா் அமைப்பின் உதவியுடன் அரோமா மிஷன் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம்செய்தது. அதன்பிறகு ஆயிரக் கணக்கான விவசாயிகள் தங்கள் மலா் சாகுபடி முறையை மாற்றிக் கொண்டனா். பெருங்காய தேவைக்கு வெளிநாடுகளை நம்பியிருந்த சூழலில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிஎஸ்ஐஆா் உதவியது.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டை மனதில் வைத்து, இலக்குகளை நோக்கி நமது விஞ்ஞானிகள் பயணிக்க வேண்டும். சிஎஸ்ஐஆரின் அனைத்துப் முயற்சிகளும் பணிகளும் எளிதில் மக்களை அடையும்வகையிலும், பெறும் வகையிலும் இருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...