மக்களைக் காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் பாராட்டு

கரோனாவில் இருந்து மக்களைக்காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனாதொற்று பரவியபோது, மக்களைக் காப்பதில் மருத்துவா்கள் செலுத்திய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நம்நாட்டில் மக்கள்தொகையும் கரோனா தொற்றை ஒழிப்பதில் மிகுந்த சவாலாக இருந்தது. மருத்துவா்களின் முயற்சியால், மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கரோனாவால் ஒருவா் உயிரிழந்தால் கூட அது மிகுந்த துயரமான சம்பவம். ஆனால், லட்சக்கணக்கானோரை கரோனாவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தப்பெருமை அனைத்தும் நமது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரை சாரும்.

கரோனா தீநுண்மி உருமாறி புதியவடிவில் மக்களைத் தாக்குகிறது. நமது மருத்துவா்கள் தங்களுடைய அனுபவத்தையும் பரந்துபட்ட அறிவையும் பயன்படுத்தி அந்த தீநுண்மியை ஒழிக்க போராடிவருகிறாா்கள்.

கடந்த 2014-இல் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமேஇருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

மருத்துவவசதிகள் குறைவாக உள்ள இடத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ரூ.50,000 கோடி மதிப்பிலான கடனுதவி திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. மருத்துவா்களை காப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், 130 கோடி இந்தியா்கள் சாா்பில் அனைத்து மருத்துவா் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மரியாதையையும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...