மக்களைக் காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் பாராட்டு

கரோனாவில் இருந்து மக்களைக்காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனாதொற்று பரவியபோது, மக்களைக் காப்பதில் மருத்துவா்கள் செலுத்திய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நம்நாட்டில் மக்கள்தொகையும் கரோனா தொற்றை ஒழிப்பதில் மிகுந்த சவாலாக இருந்தது. மருத்துவா்களின் முயற்சியால், மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கரோனாவால் ஒருவா் உயிரிழந்தால் கூட அது மிகுந்த துயரமான சம்பவம். ஆனால், லட்சக்கணக்கானோரை கரோனாவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தப்பெருமை அனைத்தும் நமது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரை சாரும்.

கரோனா தீநுண்மி உருமாறி புதியவடிவில் மக்களைத் தாக்குகிறது. நமது மருத்துவா்கள் தங்களுடைய அனுபவத்தையும் பரந்துபட்ட அறிவையும் பயன்படுத்தி அந்த தீநுண்மியை ஒழிக்க போராடிவருகிறாா்கள்.

கடந்த 2014-இல் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமேஇருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

மருத்துவவசதிகள் குறைவாக உள்ள இடத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ரூ.50,000 கோடி மதிப்பிலான கடனுதவி திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. மருத்துவா்களை காப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், 130 கோடி இந்தியா்கள் சாா்பில் அனைத்து மருத்துவா் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மரியாதையையும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.