பேசியது தேச விரோத செயல் பாஜக எதிர்ப்பு பாதிரி கைது

 

பேசியது தேச விரோத செயல் பாதிரியார் ஜார்ஜ் பொண்ணையாவை, கைது செய்ய வேண்டும் என்ற பாஜகவின் அழுத்தத்தை தொடர்ந்து அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை விவரம் வருமாறு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சட்டவிரோதமாக பேசியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்பவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை 24.07.2021 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள். தேச ஒற்றுமைக்கு எதிராகவும் உயர்பதவியில் இருக்கக்கூடிய தலைவர்களை மிக மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசியிருப்பது மனசாட்சி உள்ள எவரும் மன்னிக்க முடியாதது.

சமூக ஊடங்களில் சிறிய பதிவுகளை போடுபவர்களை கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடிய தமிழக அரசு பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏற்கனவே பொன்னையா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பொது அமைதிக்கும் மக்களிடையே இருக்கக்கூடிய சமூக, சமத்துவ ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டத்தில் பேசுகிறேன் என்று சொல்லி விஷத்தை கக்கி இருக்கிற பொன்னையாவை கண்டித்தும்,

அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பேசியது தேச விரோத செயல் என்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்றால் இவரை பேச வைத்தது திமுக தான் என்ற முடிவுக்கு வரவேண்டியது இருக்கும்.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...