வறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்னிகுக் நினைவகம் தான் கிடைத்ததா?

தென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்.

அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக்.

தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை நத்தம் சாலையில் அன்னாரின் நினைவாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டி பொறியாளர் பென்னி குக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியாகத்தின் திரு உள்ளமாக திகழ்ந்த பென்னி குக் நினைவு மண்டபத்திலே…. கலைஞரின் பெயரால் ஒரு நூல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு தென்மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களையும், பொதுமக்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிறப்பு செய்ய நினைக்கும் திமுக அரசு அவரின் பெயரில் நூல் நிலையம் அமைக்க வேறு எந்த கட்டிடமும் கிடைக்கவில்லையா…. என்று அரசின் இம் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

நதி நீர் தேக்கி வைத்து நாட்டுமக்கள் தாகத்தை தீர்த்த தியாகத்தை செய்த பென்னி குக்கின் நினைவு மண்டபத்தில் இந்த நூல் நிலையம் அமைய வேண்டுமா என்று மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

தாங்கள் குலசாமியாக வழிபடும், தெய்வத்தின் சந்நிதியில் நூலகம் எதற்காக என்றும்….

புத்தகங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள் தான் ஆனால் அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட்ட வேண்டுமா? என்றும் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகிறார்கள்.

கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதைத் தான் கலைஞரின் ஆன்மாவும் விரும்பும். ஆகவே, மக்களின் எணணங்களுக்கும் மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி அண்ணாமலை 

பாஜக மாநில தலைவர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...