வறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்னிகுக் நினைவகம் தான் கிடைத்ததா?

தென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்.

அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக்.

தன்னலமற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதுரை நத்தம் சாலையில் அன்னாரின் நினைவாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டி பொறியாளர் பென்னி குக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியாகத்தின் திரு உள்ளமாக திகழ்ந்த பென்னி குக் நினைவு மண்டபத்திலே…. கலைஞரின் பெயரால் ஒரு நூல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு தென்மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களையும், பொதுமக்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிறப்பு செய்ய நினைக்கும் திமுக அரசு அவரின் பெயரில் நூல் நிலையம் அமைக்க வேறு எந்த கட்டிடமும் கிடைக்கவில்லையா…. என்று அரசின் இம் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

நதி நீர் தேக்கி வைத்து நாட்டுமக்கள் தாகத்தை தீர்த்த தியாகத்தை செய்த பென்னி குக்கின் நினைவு மண்டபத்தில் இந்த நூல் நிலையம் அமைய வேண்டுமா என்று மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

தாங்கள் குலசாமியாக வழிபடும், தெய்வத்தின் சந்நிதியில் நூலகம் எதற்காக என்றும்….

புத்தகங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள் தான் ஆனால் அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட்ட வேண்டுமா? என்றும் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகிறார்கள்.

கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதைத் தான் கலைஞரின் ஆன்மாவும் விரும்பும். ஆகவே, மக்களின் எணணங்களுக்கும் மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி அண்ணாமலை 

பாஜக மாநில தலைவர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...