வரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதால் அதனை குறைப்பதில் சிக்கல் நிலவுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ம.பி., மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: வரி விகிதங்களை பூஜ்ஜியமாக கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், இந்தியா முன் உள்ள சவால்கள் தீவிரமானது. அதில் இருந்து வெளிவர வேண்டியது உள்ளது.
விரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனை குறைப்பதை, நம் முன் உள்ள சவால்கள் தடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிதித்தேவைகளுக்கு தற்போதைய வரி நடைமுறை முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |