அரசியலில் நாங்கள் தலையிட போவதில்லை நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் செய்ய போவதில்லை

தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவசிர்வாதம் ஆகியோரை தமிழக ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சூழலில், ஆளுநர்உடனான சந்திப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைதுசெய்யப் பட்டதும்.

அதுவும் நள்ளிரவுநேரத்தில் போலீசார் பட்டியலில் இல்லாத 100 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டதும் தமிழக அளவில் மிகபெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, இந்த சூழலில் 21000 கோடி மதிப்புடைய போதைபொருளானது அகமதாபத்தில் சிக்கியது இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த பலர் பிடிபட்டனர், இந்நிலையில் இந்த வழக்கு NIA வசம் செல்ல இருக்கிறது, இது குறித்த தகவல்களை தமிழக உளவுபிரிவு தலைவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஆளுநர்.

இதன் பிறகே டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் டெல்லியில் மரியாதைநிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்த ஆளுநர் NR.ரவி, உள்துறை அமைச்சகத்திடம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துகிறார், இதில் பல்வேறுதகவல்களை ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் தனிசெயலாளர் ஆகியோருடன் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது .

மேலும் தமிழகத்தில் NIA புதிய கிளை செயல்பாடுகள், தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவைபற்றியும் இந்த ஆலோசனையில் இடம்பெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது, இதன் செயல்பாடுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் ஆளுநர் தமிழகம்திரும்பியதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் எனவும், தமிழக காவல்துறை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை கொண்டு உச்சபட்ச ஆட்டத்தில் தமிழகஆளுநர் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அரசியலில் நாங்கள் தலையிட போவதில்லை அதேபோல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய போவதில்லை என்ற தகவலை முறைப்படி தமிழக அரசிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாம், மேலும் நாட்டின் பாதுகாப்பிற்கு முழுஒத்துழைப்பு தரதயார் எனவும் தமிழக காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்களாம், இதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழகத்தில் மிக பெரிய அளவில் இருக்கும் எனவும் அதற்கு தமிழக காவல்துறை முழு அளவில் ஒப்புதல் கொடுக்கும் என்பதே தற்போதைய முக்கியதகவலாக உள்ளது.

தமிழக ஆளுநர் RN.ரவி நியமனமே பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது ஆளுநரின் டெல்லி பயணம் அடுத்தபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...