அரசியலில் நாங்கள் தலையிட போவதில்லை நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும் சமரசம் செய்ய போவதில்லை

தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, உளவுத்துறை தலைவர் டேவிட்சன் தேவசிர்வாதம் ஆகியோரை தமிழக ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சூழலில், ஆளுநர்உடனான சந்திப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைதுசெய்யப் பட்டதும்.

அதுவும் நள்ளிரவுநேரத்தில் போலீசார் பட்டியலில் இல்லாத 100 மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டதும் தமிழக அளவில் மிகபெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, இந்த சூழலில் 21000 கோடி மதிப்புடைய போதைபொருளானது அகமதாபத்தில் சிக்கியது இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த பலர் பிடிபட்டனர், இந்நிலையில் இந்த வழக்கு NIA வசம் செல்ல இருக்கிறது, இது குறித்த தகவல்களை தமிழக உளவுபிரிவு தலைவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஆளுநர்.

இதன் பிறகே டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் டெல்லியில் மரியாதைநிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்த ஆளுநர் NR.ரவி, உள்துறை அமைச்சகத்திடம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துகிறார், இதில் பல்வேறுதகவல்களை ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் தனிசெயலாளர் ஆகியோருடன் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது .

மேலும் தமிழகத்தில் NIA புதிய கிளை செயல்பாடுகள், தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவைபற்றியும் இந்த ஆலோசனையில் இடம்பெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது, இதன் செயல்பாடுகள் விரைவில் வெளிவரலாம் எனவும் ஆளுநர் தமிழகம்திரும்பியதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் எனவும், தமிழக காவல்துறை, உளவு அமைப்புகள் ஆகியவற்றை கொண்டு உச்சபட்ச ஆட்டத்தில் தமிழகஆளுநர் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அரசியலில் நாங்கள் தலையிட போவதில்லை அதேபோல் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய போவதில்லை என்ற தகவலை முறைப்படி தமிழக அரசிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாம், மேலும் நாட்டின் பாதுகாப்பிற்கு முழுஒத்துழைப்பு தரதயார் எனவும் தமிழக காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்களாம், இதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழகத்தில் மிக பெரிய அளவில் இருக்கும் எனவும் அதற்கு தமிழக காவல்துறை முழு அளவில் ஒப்புதல் கொடுக்கும் என்பதே தற்போதைய முக்கியதகவலாக உள்ளது.

தமிழக ஆளுநர் RN.ரவி நியமனமே பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது ஆளுநரின் டெல்லி பயணம் அடுத்தபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...