கண்ணை கட்டிக்கொண்டு விசாரணை நடத்தும் விடியல் அரசு

மதமாற்றத்தின் பெயரில் சகோதரி அரியலூர் லாவண்யாவின் உயிரை பலி கொண்டது மட்டுமல்லாமல், அதை திசை திருப்ப முயலும் செயல் கண்டிக்கத்தக்கது. அன்று நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாமல் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா விற்காக நீட் தேர்வே கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்று பொங்கிய திருமாவளவன், தற்போதைய தமிழக முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர், இன்று அரியலூர் லாவண்யாவிற்காக மதமாற்றம் கூடாது என்பார்களா, மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவு தான் தருவார்களா எல்லாம் வேஷதாரிகள்.

சிறுவயதிலேயே தாயை இழந்த லாவண்யா நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள கிறிஸ்தவ பள்ளியிலே சேர்க்கப்படுகிறார். அந்தப் பள்ளி கல்வியுடன் மத மாற்றத்தையும் சேர்த்தே போதித்துள்ளது. பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த லாவண்யா இன்னும் சில வருடம் தானே கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காலத்தைக் கடக்க, காலம் கடப்பதற்குள் அவளை மதம் மாற்றி விடவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் துடிக்க, இறுதியில் பொறுமை இழந்த காலன் அவளை பற்றிக்கொண்டது என்பதே நிதர்சனம். அதாவது கொடுமை தாங்காமல் பூச்சி மருந்து குடித்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளாள்.

இதற்கு அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த காணொளியே சான்று. அவள் பெற்றோரும் இதை உறுதி செய்துள்ளனர். மேலும் இது ஊர் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக கல்வி என்ற போர்வையில் மதமாற்றம் நடைபெறுவதும், பல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தங்கள் மத அடையாளங்களை துறக்க கட்டாயப்படுத்துவதும், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளே தங்கள் நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் சுமக்க வலியுறுத்துவதும் நாடே அறிந்த ஒன்றுதான்.

2006 ஆம் ஆண்டு பாத்திமா கத்தோலிக்க பள்ளியில் பயின்ற ஓமலூர் சுகன்யா தற்கொலையாகட்டும், 2009ஆம் ஆண்டு பைபிளை சரியாக படிக்க தெரியாததால் அவமானத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட 12 வயது ரஞ்சிதாவாகட்டும், அதே ஆண்டு சென்னை அம்பத்தூர் இம்மானுல் மெத்தடிஸ்ட் பள்ளி ரம்யா தற்கொலையாகட்டும் எத்தனையோ உதாரணங்களை கூறலாம். இந்த வரிசையில் தான் தற்போது லாவண்யாவும் சேர்ந்துள்ளாள்.

ஒதுக்கப்பட்ட சமூகத்தின் சமூக நீதிக்காக தன வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா, தனது பள்ளிக்காலத்தில் தான் படித்த திண்டிவனம் சிகாமணி பள்ளி தன்னை மதம் மாற வலியுறுத்தியதையும், மறுத்த தன்னை, தனது வறுமை தெரிந்தும் முழு கட்டணத்தையும் செலுத்த நெருக்கடிக்கு உள்ளாக்கியதையும், வேறுவழியின்றி பள்ளிப்படிப்பை பாதியிலேயே துறந்ததையும் ஒருமுறை கூறியுள்ளார். அது 1900 ஆம் ஆண்டைய காலக்கட்டம் என்றாலும், அது 100 ஆண்டுகளை கடந்தும் தொடர்வதும். வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்து விட்ட பின்பும் அதே சூழல் நிலவுவதும் வேதனையான ஒன்று. காரணம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிமையாகி போன அரசியல் வர்க்கமும், அவர்கள் இட்ட பணிக்கு கைகட்டி வேலை பார்க்கும் அதிகார வர்க்கமுமே. இல்லாவிடில் கண்ணுக்கு எட்டிய தூரம் ஆதாரம் இருந்தும் கண்ணை கட்டிக்கொண்டு குற்றவாளிகளை தேடுமா காவல் துறையும், அதன் விடியல் அரசும். இதற்குத்தான் பாஜக வேண்டும் என்கிறது சிபிஐ விசாரணை.

நன்றி; தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...