உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்பு

உக்கரைனின் கிழக்கே ஒன்றரைலட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்துவிட்டது. ..!நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டுமழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப் படையும் நகரில் மார்ச் செய்கிறது.

கிட்டத்தட்ட 20000 இந்தியர்கள் அங்கே அதில் 5000 பேர் இந்தியஅரசின் முதல் எச்சரிக்கையை மதித்து முதலிலே வெளியேறி விட்டார்கள் மீதி 15000 பேரை மீட்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிராஸ்பயரில் சிக்கலாம். துடிப்புடன் செயல்பட்டது இந்திய உயர்மட்ட குழு.

அரசியல் நிலை நடப்புகள் எதிர்காலம் விவாதிக்கப்பட, கூடவே உருவாக்கப்பட்ட டீம் செயற்பட தொடங்கியது. திட்டம்வகுத்த ஜெய்ஷங்கர்,அஜித் டோவலின் ஆணைப்படி உக்கரைனை சுற்றி உள்ள நாடுகளின் தூதரகங்கள் செயல்படத்தொடங்கின.
ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவேகிய, மால்டொவா இந்த ஐந்து நாடுகளிலும் அந்த அரசாங்கத்திடம் பேசி கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கபட்டது. அவை இந்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது.

அதன் எல்லைகளில் என்ட்ரி பாய்ன்ட்கள் முடிவுசெய்யப்பட்டு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட, இரண்டு பக்கதகவல் பறிமாற்றத்துக்கு பின் இந்தியர்கள் அங்கே வரத்தொடங்க…அவர்கள் தங்கவைக்கபட்டு, இந்திய விமானம் வந்தபின் குழு குழுவாக திரும்பதொடங்கினார்கள்.

யாருமே எதிர்பாராத விதமாகதிரு ஹர்திபூரி, ஜோதிர்த்யா சிந்தியா, கிரண் ராஜு, வி.கே சிங்க் ஆகிய நான்கு மந்திரிகளும் ஆளுக்கொருவராக இந்தநாடுகளுக்கு பயணப்பட்டு அங்கேயே இருந்து வேலைகளை கவனிக்கிறார்கள்.

அனைவரையும் இணைக்கும் கோஆர்டினேட்டர் அஜித் தோவல். இதற்கிடையே உக்கரைன்அதிபர் மோடியை தொடர்புகொண்டு போரைநிறுத்த வேண்டுகோள் விடுக்க, புடின் தொடர்புகொண்டு விளக்கங்கள் கொடுக்க, வெளியுறவுதுறை அத்தனை அம்சங்களையும் அலசிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இந்த மீட்புவேலைகளை இன்னும் தொடங்கவே இல்லாதநிலை…

இந்தியா மட்டும் சிக்கலை சமாளித்து, மீட்பதைவிவரித்து விட்டு, மிக பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியா கொரானாவை சமாளித்த அட்வென்சரையும் நினைவுபடுத்தி உலகுக்கே பாரதம் இப்போதெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லி அதிசயத்திருக்கிறது மேற்கத்தைய ஊடகம் ஓன்று.

இது உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்புநடவடிக்கை என்கிறது சிஎன்என் தொலைக்காட்சி.
பின் குறிப்பு : சொல்லாமல் இருக்க முடியவில்லை. மும்பை குண்டுவெடிப்பில் அலறிக் கொண்டிருக்க, அப்போதய உள்துறை அமைச்சரை எழுப்பி அவர் குளித்து உடைகளை மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 2 மணிநேரமாம். அவரோ, மவுன சாமியாரோ மும்பை பயணப்படவே இல்லை..!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...