உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்பு

உக்கரைனின் கிழக்கே ஒன்றரைலட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்துவிட்டது. ..!நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டுமழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப் படையும் நகரில் மார்ச் செய்கிறது.

கிட்டத்தட்ட 20000 இந்தியர்கள் அங்கே அதில் 5000 பேர் இந்தியஅரசின் முதல் எச்சரிக்கையை மதித்து முதலிலே வெளியேறி விட்டார்கள் மீதி 15000 பேரை மீட்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிராஸ்பயரில் சிக்கலாம். துடிப்புடன் செயல்பட்டது இந்திய உயர்மட்ட குழு.

அரசியல் நிலை நடப்புகள் எதிர்காலம் விவாதிக்கப்பட, கூடவே உருவாக்கப்பட்ட டீம் செயற்பட தொடங்கியது. திட்டம்வகுத்த ஜெய்ஷங்கர்,அஜித் டோவலின் ஆணைப்படி உக்கரைனை சுற்றி உள்ள நாடுகளின் தூதரகங்கள் செயல்படத்தொடங்கின.
ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவேகிய, மால்டொவா இந்த ஐந்து நாடுகளிலும் அந்த அரசாங்கத்திடம் பேசி கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கபட்டது. அவை இந்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது.

அதன் எல்லைகளில் என்ட்ரி பாய்ன்ட்கள் முடிவுசெய்யப்பட்டு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட, இரண்டு பக்கதகவல் பறிமாற்றத்துக்கு பின் இந்தியர்கள் அங்கே வரத்தொடங்க…அவர்கள் தங்கவைக்கபட்டு, இந்திய விமானம் வந்தபின் குழு குழுவாக திரும்பதொடங்கினார்கள்.

யாருமே எதிர்பாராத விதமாகதிரு ஹர்திபூரி, ஜோதிர்த்யா சிந்தியா, கிரண் ராஜு, வி.கே சிங்க் ஆகிய நான்கு மந்திரிகளும் ஆளுக்கொருவராக இந்தநாடுகளுக்கு பயணப்பட்டு அங்கேயே இருந்து வேலைகளை கவனிக்கிறார்கள்.

அனைவரையும் இணைக்கும் கோஆர்டினேட்டர் அஜித் தோவல். இதற்கிடையே உக்கரைன்அதிபர் மோடியை தொடர்புகொண்டு போரைநிறுத்த வேண்டுகோள் விடுக்க, புடின் தொடர்புகொண்டு விளக்கங்கள் கொடுக்க, வெளியுறவுதுறை அத்தனை அம்சங்களையும் அலசிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இந்த மீட்புவேலைகளை இன்னும் தொடங்கவே இல்லாதநிலை…

இந்தியா மட்டும் சிக்கலை சமாளித்து, மீட்பதைவிவரித்து விட்டு, மிக பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியா கொரானாவை சமாளித்த அட்வென்சரையும் நினைவுபடுத்தி உலகுக்கே பாரதம் இப்போதெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லி அதிசயத்திருக்கிறது மேற்கத்தைய ஊடகம் ஓன்று.

இது உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்புநடவடிக்கை என்கிறது சிஎன்என் தொலைக்காட்சி.
பின் குறிப்பு : சொல்லாமல் இருக்க முடியவில்லை. மும்பை குண்டுவெடிப்பில் அலறிக் கொண்டிருக்க, அப்போதய உள்துறை அமைச்சரை எழுப்பி அவர் குளித்து உடைகளை மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 2 மணிநேரமாம். அவரோ, மவுன சாமியாரோ மும்பை பயணப்படவே இல்லை..!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...