உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்பு

உக்கரைனின் கிழக்கே ஒன்றரைலட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்துவிட்டது. ..!நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டுமழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப் படையும் நகரில் மார்ச் செய்கிறது.

கிட்டத்தட்ட 20000 இந்தியர்கள் அங்கே அதில் 5000 பேர் இந்தியஅரசின் முதல் எச்சரிக்கையை மதித்து முதலிலே வெளியேறி விட்டார்கள் மீதி 15000 பேரை மீட்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிராஸ்பயரில் சிக்கலாம். துடிப்புடன் செயல்பட்டது இந்திய உயர்மட்ட குழு.

அரசியல் நிலை நடப்புகள் எதிர்காலம் விவாதிக்கப்பட, கூடவே உருவாக்கப்பட்ட டீம் செயற்பட தொடங்கியது. திட்டம்வகுத்த ஜெய்ஷங்கர்,அஜித் டோவலின் ஆணைப்படி உக்கரைனை சுற்றி உள்ள நாடுகளின் தூதரகங்கள் செயல்படத்தொடங்கின.
ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவேகிய, மால்டொவா இந்த ஐந்து நாடுகளிலும் அந்த அரசாங்கத்திடம் பேசி கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கபட்டது. அவை இந்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது.

அதன் எல்லைகளில் என்ட்ரி பாய்ன்ட்கள் முடிவுசெய்யப்பட்டு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட, இரண்டு பக்கதகவல் பறிமாற்றத்துக்கு பின் இந்தியர்கள் அங்கே வரத்தொடங்க…அவர்கள் தங்கவைக்கபட்டு, இந்திய விமானம் வந்தபின் குழு குழுவாக திரும்பதொடங்கினார்கள்.

யாருமே எதிர்பாராத விதமாகதிரு ஹர்திபூரி, ஜோதிர்த்யா சிந்தியா, கிரண் ராஜு, வி.கே சிங்க் ஆகிய நான்கு மந்திரிகளும் ஆளுக்கொருவராக இந்தநாடுகளுக்கு பயணப்பட்டு அங்கேயே இருந்து வேலைகளை கவனிக்கிறார்கள்.

அனைவரையும் இணைக்கும் கோஆர்டினேட்டர் அஜித் தோவல். இதற்கிடையே உக்கரைன்அதிபர் மோடியை தொடர்புகொண்டு போரைநிறுத்த வேண்டுகோள் விடுக்க, புடின் தொடர்புகொண்டு விளக்கங்கள் கொடுக்க, வெளியுறவுதுறை அத்தனை அம்சங்களையும் அலசிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இந்த மீட்புவேலைகளை இன்னும் தொடங்கவே இல்லாதநிலை…

இந்தியா மட்டும் சிக்கலை சமாளித்து, மீட்பதைவிவரித்து விட்டு, மிக பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியா கொரானாவை சமாளித்த அட்வென்சரையும் நினைவுபடுத்தி உலகுக்கே பாரதம் இப்போதெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லி அதிசயத்திருக்கிறது மேற்கத்தைய ஊடகம் ஓன்று.

இது உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்புநடவடிக்கை என்கிறது சிஎன்என் தொலைக்காட்சி.
பின் குறிப்பு : சொல்லாமல் இருக்க முடியவில்லை. மும்பை குண்டுவெடிப்பில் அலறிக் கொண்டிருக்க, அப்போதய உள்துறை அமைச்சரை எழுப்பி அவர் குளித்து உடைகளை மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 2 மணிநேரமாம். அவரோ, மவுன சாமியாரோ மும்பை பயணப்படவே இல்லை..!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...