கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

ஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத இயக்கம் மட்டும்மல்ல, பயங்கரவாத இயக்கமும் கூட என மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி திருவாய் மலர்ந்துள்ளார் .

இதற்க்கு இவர் கூறும் காரணம் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து பிறகு வெளியேறிய ஒருவர் சம்பந்த பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் .

அதாவது ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் தவறு செய்தால் அதற்க்கு அந்த இயக்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அப்படி பார்த்தோம் என்றால் பற் பல இந்நாள் நக்சலைட்டுகள் முன்னாள் சிபி எம் ஊழியர்களே! அதற்க்காக மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்களுக்கு கம்யூனிஸ்டுகளின் மேல் பழி போடலாமா ? அதை போன்று RSSலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் செயல்களுக்கு RSS சின் மீது குற்றம் சுமத்துவது முட்டாள்தனமே!

கடந்த 1995ம்_ஆண்டு நாகூரைசேர்ந்த இந்து முன்னணி தலைவரான முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலமாக ஒரு பார்சல்_வந்தது. அதைபிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம், அதிலிருந்த வெடிகுண்டு வெடித்து பலியானார்.

இந்தவழக்கில் ரிபாயி,குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யபட்டனர். சமீபத்தில் தான் ரிபாயி, தமுமுக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , இதற்காக தமுமுக வை உங்களால் விமர்சிக்க முடியுமா .

1998-ஆம் அண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டவர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி , ஆனால் அவருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் தானே உங்கள் கேரள கம்யூனிஷ்ட்டுகள் , மேலும் முன்னால் கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஒரு படி மேலே போய் தன்னுடைய சில அமைச்சர்களை கோவை_சிறையில் மதானியை சந்தித்து தைரியம் கூறுமாறு பணித்தார். பிறகு அச்சுதானந்தனே நேராக சென்னை வந்து அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியை_சந்தித்து மதானியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் இரட்டை வேடம் ,

ஒரு அமைப்பின் தலைவர் குற்றம் செய்தால் வாய் திறக்க மறுக்கும் கம்யூனிஷ்ட்டுகள், ஒரு அமைப்பின் பல லட்சம் தொண்டர்களில் ஒரு சிலர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே குறை கூறுவது ஏனோ . இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...