கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

ஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத இயக்கம் மட்டும்மல்ல, பயங்கரவாத இயக்கமும் கூட என மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி திருவாய் மலர்ந்துள்ளார் .

இதற்க்கு இவர் கூறும் காரணம் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து பிறகு வெளியேறிய ஒருவர் சம்பந்த பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் .

அதாவது ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் தவறு செய்தால் அதற்க்கு அந்த இயக்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அப்படி பார்த்தோம் என்றால் பற் பல இந்நாள் நக்சலைட்டுகள் முன்னாள் சிபி எம் ஊழியர்களே! அதற்க்காக மாவோயிஸ்டுகளின் தீவிரவாத செயல்களுக்கு கம்யூனிஸ்டுகளின் மேல் பழி போடலாமா ? அதை போன்று RSSலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் செயல்களுக்கு RSS சின் மீது குற்றம் சுமத்துவது முட்டாள்தனமே!

கடந்த 1995ம்_ஆண்டு நாகூரைசேர்ந்த இந்து முன்னணி தலைவரான முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலமாக ஒரு பார்சல்_வந்தது. அதைபிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம், அதிலிருந்த வெடிகுண்டு வெடித்து பலியானார்.

இந்தவழக்கில் ரிபாயி,குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யபட்டனர். சமீபத்தில் தான் ரிபாயி, தமுமுக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , இதற்காக தமுமுக வை உங்களால் விமர்சிக்க முடியுமா .

1998-ஆம் அண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டவர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி , ஆனால் அவருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் தானே உங்கள் கேரள கம்யூனிஷ்ட்டுகள் , மேலும் முன்னால் கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஒரு படி மேலே போய் தன்னுடைய சில அமைச்சர்களை கோவை_சிறையில் மதானியை சந்தித்து தைரியம் கூறுமாறு பணித்தார். பிறகு அச்சுதானந்தனே நேராக சென்னை வந்து அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியை_சந்தித்து மதானியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் இரட்டை வேடம் ,

ஒரு அமைப்பின் தலைவர் குற்றம் செய்தால் வாய் திறக்க மறுக்கும் கம்யூனிஷ்ட்டுகள், ஒரு அமைப்பின் பல லட்சம் தொண்டர்களில் ஒரு சிலர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே குறை கூறுவது ஏனோ . இதுதான் கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...