இந்தியாவின் பால் உற்பத்தி கோதுமையின் வருவாயை மிஞ்சிவிட்டது

இந்தியாவின் பால்உற்பத்தி உலகிலேயே மிகஅதிகம் எனவும், இது அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சிவிட்டது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில்.

உள்ள பனாஸ் பால் பண்ணையில் புதியவளாகம் மற்றும் உருளை பதப்படுத்துதல் தொழிற் சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பால்உற்பத்தியின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. இது அரிசிமற்றும் கோதுமையின் வருவாயைவிட அதிகம். இதனால் பால் துறையில் சிறுவிவசாயிகள் அதிக அளவில் பயனடைகின்றனர்.

இன்று, பால் அதிகளவில் உற்பத்திசெய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதில் கோடிக்கணக்கான சிறுவிவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா பால் உற்பத்தி செய்தாலும், மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் உட்பட பலர் இதில்கவனம் செலுத்துவதில்லை. கோதுமை, அரிசி மூலம் கிடைக்கும் வருவாய் கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு நிகராக இல்லை. பால்துறையில் மிகப்பெரிய பலன் அடைபவர்கள் சிறு விவசாயிகள்.

இவர்களின் மேம்பாட்டுக்காகவும், கிராமபொருளதாரத்தை ஊக்குவிக்கவும் புதிய பால் வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார். இதோடு பனாஸ் சமுதாய வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பாலாடை பொருட்கள் தயாரிப்பு, பால்பவுடர் தயாரிப்பு வசதிகளையும் பிரதமர் விரிவுபடுத்தினார். தமாபகுதியில் ஆர்கானிக் உரம் மற்றும் பயோ காஸ் ஆலையும் தொடங்கிவைக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.