தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும், அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டும்

மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷீத் சனியன்று பேசிய பேச்சு விரக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல, விஷமத்தனமானது. உத்தரப்பிரதேச மாநில தேர்தலை பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே வாழ்வா சாவா என்ற நோக்கிலேயே அணுகி வருகின்றன. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி ஒரு வேளை

இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினால், தற்போது ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் காலை வாருவதற்காக சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. மற்ற கட்சிகள் காலை வாரும் அந்த நேரத்தில், திமுக காங்கிரஸ் கட்சியின் சங்கை அறுப்பதற்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த விபரங்கள் மற்ற அனைவரை விடவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும்.

தன் மகனை 2014ல் பிரதமராக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் சோனியா ஆட்சி கவிழக் கூடாது என்பதில் மிக மிக கவனமான இருக்கிறார். இது தவிரவும், தன் மகன், மகள், மருமகன் ஆகியோரின் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாகவும் உத்தரப்பிரதேசத் தேர்தல் சோனியாவால் பார்க்கப் படுகிறது.

இந்தியாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்தில் தற்போது அரசியலில் நுழைந்திருக்கும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும், தன் பங்குக்கு தனது அரசியல் ஆர்வத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பொதுமக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவாராம். ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும், கடந்த காலத்தைப் போலல்லாமல், மிக மிகத் தீவிரமாக இத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்குமுனைப் போட்டியாக இருப்பதால், இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முலாயம் ஒரு பக்கமும், மாயாவதி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஒரு புறமுமாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தந்து கொண்டு உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் முஸ்லீம்களின் வாக்ககளை எப்படியாது பெற்று விட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியைத் தவிர்த்து அனைத்து கட்சிகளுமே பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. முஸ்லீம்களின் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு உத்தரப்பிரதேசத் தேர்தலில், சாதகத்தன்மை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே முஸ்லீம்களைக் கவரும் விதமாக கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி எப்படியாவது இத்தேர்தலில் வென்று, இந்தியா ராஜீவ் காந்தி குடும்பத்தின் சொத்து என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது தவிரவும், காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் இருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு இத்தேர்தல் பயன்படும் என்று கருதுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், அது ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும் என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அளவுக்கு அதிகமான விசுவாசத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த 8 பிப்ரவரி அன்று, உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்ருமான சல்மான் குர்ஷீத் பேசியுள்ளார். அன்றைய பேரணியில் பேசிய குர்ஷீத், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் 9 சதவிகிதம் இசுலாமியர்களுக்காக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்த வாக்குறுதி ஒரு அரசியல்கட்சித் தலைவர் வழங்கும் வாக்குறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்லும் இந்த அறிவிப்பு, நிச்சயமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, 9 பிப்ரவரி அன்று கூடிய தேர்தல் ஆணையர்கள் குரேஷி, வி.எஸ்.சம்பத் மற்றும் எச்.எஸ்.பிரம்மா ஆகியோர் சல்மான் குர்ஷீத்தை கண்டித்து ஆணை வெளியிட்டனர். அவர்கள் ஆணையில், 'தேர்தல் ஆணையம் இதன் மூலம் சர்மான் குர்ஷீத்தை கண்டிக்கிறது. அவர் மேலும் இது போன்ற நடத்தை விதி மீறல்களில் ஈடுபடமாட்டார் என்ற நம்புகிறது' என்று அந்த ஆணையில் தெரிவிக்கப் பட்டது.

மறுநாள் (9 பிப்ரவரி) கடக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சல்மான் குர்ஷீத், "தேர்தல் ஆணையம் என்னைக் கண்டித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் என்னைத் தூக்கில் போடட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் இசுலாமியர்களுக்கு வர வேண்டிய நியாயமான சலுகைகளை நான் வழங்காமல் இருக்க மாட்டேன்."

சல்மான் குர்ஷீத்தின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய சர்ச்சையையும், சட்டச் சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் நீதித்துறை போல, ஓரளவுக்கு தன்னிச்சையாக, சுதந்திரத்தோடு செயல்படும் அமைப்புகளில், தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது நிலைநாட்டப் பட்டால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியும். தேர்தல் ஆணையத்துக்கு வரைமுறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதற்காக வானத்தை நோக்கி கை கூப்பி வேண்டிக் கொண்டிருக்க முடியாது. நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அத்தனை நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம்" என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் மட்டும் சுதந்திரமாக, நியாயமான முறையில் செயல்படவில்லையென்றால், 2011 சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும், அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டியது, ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அடிப்படையான ஒன்று. அந்த அமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவது இறுமாப்பான காரியம் மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. அதுவும் சட்டத்துறை அமைச்சரே, இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பது வேதனையிலும் வேதனை

சச்சார் கமிட்டியில் தெரிவித்திருந்தபடி, இசுலாமியர்கள் மோசமான நிலையில் 60 ஆண்டுகளுக்கான இருந்ததற்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியே காரணம். இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க இப்போது உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில் முனைப்பாக விதிகளை மீறி அறிவிப்புகளை வெளியிடும் காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாக இசுலாமியர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

சரி இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்ன உரிமை இந்த பாரத தேசத்தில் இல்லை? மற்றவர்களை போலவே பள்ளி கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகி றது. அதே பாடம் தான் எல்லோரும் கற்கிறோம். வேலை வாய்ப்புகளும் எல்லோரும் விண்ணப்பிக்கிறோ ம்… (தயவு செய்து அரசாங்க வேலை தான் வேண்டும் என்று சொல்ல வேண்டாம்… எந்த மதமாக இருந்தாலும் நம் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பதில்லை) த குதி உள்ளவர்கள் வேலையை பெறுகிறார்கள்…. இது போக, இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்று தனி சட்டம் வேறு… அவர்கள் எல்லா வகையான சட்டங்களையும் பின்பற்றுவதில்ல லை . (எ.கா. பல திருமணம், விவாகரத்து) அதே நேரத்தில் இஸ்லாமிய நாட்டில் மற்ற மதங்களை வணங்குவது தடை செய்யப்பட்டது. அங்கு மற்ற மதத்தினருக்கு எந்த ஒரு சலுகையும் கிடைப்பதில்லை… பின் எதற்காக நம் நாட்டில் இவ்வளவு பிரச்சனை .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...