மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்நோக்கம்

வாக்குவங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல் அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்நோக்கம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது: “நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்த பின்னர் இங்கு பெரியமாற்றங்கள் நடந்துள்ளன. முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் வாக்குவங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. மோடி தலைமையிலான அரசு மக்களை மகிழ்விக்கும் திட்டங்களை உருவாக்குதில்லை மாறாக அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குகிறது.

நாங்கள் ஜிஎஸ்டி கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாங்கள் டிபிடி (Direct Benefit Transfer) கொண்டுவந்த போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கண்டிப்பாக இடைத்தரகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இதுபோல தான் அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு கடினமானதாக இருந்தாலும் அவர்களின் நலன் சார்ந்தே அவைகள் இருக்கும்.

நீங்கள் ஒரு கொள்கையை புரிந்துகொள்வதற்கு அது உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த ஒரு கொள்கையையும் வாக்குவங்கியை மனதில் கொண்டு உருவாக்குவதில்லை. மாறாக பிரச்சினைக்கான முழுமையான தீர்வின் அடிப்படையில் உருவாக்குகிறோம்.

மோடி அரசு, பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் உருவாக்கப் படவில்லை. மோடி அரசானது கொள்கைகளின் அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

பொதுவசதி என்பதை நாம் கருத்தில் கொண்டால்,எங்களின் அரசு முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. அதிகாரிகள் பல்வேறு மட்டங்களில் இருந்துவரும் அறிவுரைகளை அவர்கள் பார்வையில் ஏற்றுக்கொண்டும், அதேநேரத்தில் முழுமையான கோணத்தில் அதனை ஆராய்ந்து, அதன்பின்னர் அந்த பகுதிக்கு ஏற்றவகையில் செயல்பட அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

,”எந்த ஒரு அரசிடமிருந்து நல்லவிஷயங்கள் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தசித்தாந்தம் கொண்ட அரசாங்கமாக இருந்தாலும், அதன் சிறந்த முடிவுகளை ஒரு நல்ல பத்திரிகையாளர் திறந்தமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் பத்திரிக்கையாளர் இல்லை சமூக செயல்பாட்டாளர். ஒரு சமூக செயல்பாட்டாளர் பத்திரிக்கையாளராகவோ, பத்திரிக்கையாளர் சமூக செயல் பாட்டாளராகவோ இருக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு பணிகள். அதனதன் நிலையில் இரண்டும் சிறந்தபணிகளே. ஒன்று இன்னென்றுடைய வேலையை செய்யும் போது பிரச்சினை உண்டாகிறது. இன்றைய நிலையில் இது மிகவும் அதிகரித்துள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...