மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யுங்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக. தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இந்தாண்டு நிறுவனநாள் மிகவும் முக்கியமானது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக்கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதியவாய்ப்புகள் வருகின்றன.

மூன்றாவதாக இந்தாண்டு நடைபெற்றதேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 180 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளன. உலகம் முழுவதும் இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்தியஅரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.

குடும்ப அரசியல்செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக. மட்டுமே அதற்குமாற்றாக செயல்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

இன்று முதல் சமூகநீதி பிரசாரம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன். ஏழைகளுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒருதொண்டன் என்ற முறையில் கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, நானும் ஒரு தொண்டனாக என்னால் முடிந்ததைச் செய்வேன். உங்கள் தொண்டராக உங்களிடமிருந்தும் அதையே எதிர் பார்க்கிறேன்

பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...