மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யுங்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக. தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இந்தாண்டு நிறுவனநாள் மிகவும் முக்கியமானது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக்கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதியவாய்ப்புகள் வருகின்றன.

மூன்றாவதாக இந்தாண்டு நடைபெற்றதேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 180 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளன. உலகம் முழுவதும் இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்தியஅரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.

குடும்ப அரசியல்செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக. மட்டுமே அதற்குமாற்றாக செயல்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

இன்று முதல் சமூகநீதி பிரசாரம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன். ஏழைகளுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒருதொண்டன் என்ற முறையில் கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, நானும் ஒரு தொண்டனாக என்னால் முடிந்ததைச் செய்வேன். உங்கள் தொண்டராக உங்களிடமிருந்தும் அதையே எதிர் பார்க்கிறேன்

பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...