அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன்

வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ”அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன். அப்போது, இந்ததிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வோம்,” என, குறிப்பிட்டார்.

இந்நிலையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்றதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இதைத்தொடர்ந்து, வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டம், கடந்த ஜன., 7ல் துவக்கப்பட்டது. நாடுமுழுதும், 329 மாவட்டங்களில், 500 வட்டாரங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், இந்த வட்டாரங்களில் அரசு மற்றும் பொது சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்ததிட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், அதிகாரிகள் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோருடன், ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுதும், 112 மாவட்டங்களில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்த பட்டது. இதனால், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந் துள்ளனர். தற்போது இந்த மாவட்டங்கள், உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.

இந்த வகையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள்திட்டம், 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஓர் ஆண்டுக்குள், 100 வட்டாரங்களாவது, உத்வேகம் அளிக்கும்வட்டாரங்களாக மாற வேண்டும்.

அடுத்த ஆண்டு அக்., நவம்பரில் மீண்டும் நாம் ஆய்வுசெய்வோம். அப்போது, நான் மீண்டும் வந்து உங்களுடன் பேசுவேன். என்னைப்போல ஒரு சிலருக்கே, ஆட்சியை நீண்ட காலம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

என் அனுபவத்தில், பட்ஜெட் ஒதுக்கீட்டால் மட்டுமே ஒருதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது. அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...