அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன்

வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ”அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன். அப்போது, இந்ததிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வோம்,” என, குறிப்பிட்டார்.

இந்நிலையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்றதிட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.இதைத்தொடர்ந்து, வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் திட்டம், கடந்த ஜன., 7ல் துவக்கப்பட்டது. நாடுமுழுதும், 329 மாவட்டங்களில், 500 வட்டாரங்களில் இது செயல்படுத்தப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், இந்த வட்டாரங்களில் அரசு மற்றும் பொது சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்ததிட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், அதிகாரிகள் உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்டோருடன், ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுதும், 112 மாவட்டங்களில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்த பட்டது. இதனால், 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந் துள்ளனர். தற்போது இந்த மாவட்டங்கள், உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.

இந்த வகையில், வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள்திட்டம், 500 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஓர் ஆண்டுக்குள், 100 வட்டாரங்களாவது, உத்வேகம் அளிக்கும்வட்டாரங்களாக மாற வேண்டும்.

அடுத்த ஆண்டு அக்., நவம்பரில் மீண்டும் நாம் ஆய்வுசெய்வோம். அப்போது, நான் மீண்டும் வந்து உங்களுடன் பேசுவேன். என்னைப்போல ஒரு சிலருக்கே, ஆட்சியை நீண்ட காலம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

என் அனுபவத்தில், பட்ஜெட் ஒதுக்கீட்டால் மட்டுமே ஒருதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியாது. அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து, அனைவரும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...