நவீன தொழில் நுட்பங்களையும் அரசு அதிகாரிகள் கற்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

அரசு அதிகாரிகளின் பணித் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும், ‘கர்மயோகி’ என்ற திட்டம், 2020 செப்.,ல் துவக்கப்பட்டது. இதன்படி பணியிடை பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கர்மயோகி தேசிய கற்றல் வார நிகழ்ச்சியை டில்லியில் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கர்மயோகி திட்டத்தின் வாயிலாக அரசு அதிகாரிகளுக்கு தேவையான பணியிடை பயற்சி வழங்கும் முயற்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில், 1,400க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில், 1.5 கோடி பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்பதை உலக நாடுகள் ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. நம் நாட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு ஏ.ஐ., எனப்படும் ‘ஆஸ்பிரேஷன் இந்தியா’ என்ற முன்னேற விரும்பும் இந்தியா என்ற சவால் நம்முன் உள்ளது.

இந்த இரண்டும் இணையும்போது, 2047ல் வளர்ந்த நாடு என்ற இலக்கை நாம் சுலபமாக எட்ட முடியும்.

இதற்கு, அரசு அதிகாரிகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதன் வாயிலாக தங்களுடைய பணித் திறன்களை மேம்படுத்தி கொள்வதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் உதவும்.

ஐ.ஏ.எஸ்., போன்ற குடிமைப்பணிகளுக்கு தனியாக பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் புதுமையை புகுத்த வேண்டும். இதற்கு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இளைஞர்கள், ஆராய்ச்சி அமைப்புகள் தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...