ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சார்பிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  அண்மையில் ஜூன்மாதம் நடைபெற்ற மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலில், இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களுக்கு சேவைசெய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை இன்று உங்களிடம் கொண்டு வருகிறேன்.

உலகளாவிய எதிர்காலம் குறித்து நாம் விவாதிக்கும் போது, மனிதனை மையமாகக்கொண்ட  அணுகுமுறைக்கு நாம் உயர்  முன்னுரிமை அளிக்க வேண்டும். நீடித்த  வளர்ச்சிக்கு முன்னுரிமை  அளிக்கும் அதே வேளையில், மனித நலன், உணவு  மற்றும் சுகாதாரப்  பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் 250 மில்லியன்  மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியதன் மூலம், நிலையான  வளர்ச்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை நாங்கள்  நிரூபித்துள்ளோம். எங்கள் வெற்றியின் இந்த அனுபவத்தை முழு உலகளாவிய தெற்குடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

 

மனிதகுலத்தின் வெற்றி நமது கூட்டுவலிமையில் உள்ளதே தவிர, போர்க்களத்தில் அல்ல. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, உலகஅமைப்புகளில் சீர்திருத்தங்கள்  அவசியமாகும். சீர்திருத்தம்தான் முக்கியம்! புதுதில்லி  உச்சிமாநாட்டில் ஜி20 அமைப்பில், ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினர்ஆனது,  இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். ஒருபுறம் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும்  நிலையில், மறுபுறம், இணையவெளி கடல்சார் மற்றும் விண்வெளி போன்ற துறைகள் புதிய மோதல் அரங்கங்களாக உருவாகி வருகின்றன. இந்தஅனைத்து  பிரச்சனைகளிலும், உலகளாவிய நடவடிக்கை, உலகளாவிய லட்சியத்திற்கு  இணையாக இருக்கவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்!

தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன் படுத்தவும், சமச்சீரான ஒழுங்குமுறை தேவைப் படுகிறது. தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப் படுவதை உறுதிசெய்யும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகை நமக்கு தேவை. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டுமே அல்லாமல், ஒரு தடையாக அல்ல! உலகளாவிய நன்மைக்காக, இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஒட்டுமொத்த உலகத்துடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது ஒரு உறுதிப்பாடு. “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்“, “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு” போன்ற நமது முன்முயற்சிகளிலும் இந்த உறுதிப்பாடு பிரதிபலிக்கிறது. அனைத்து மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய செழிப்பிற்கும் இந்தியா சிந்தனை, சொல் மற்றும் செயலில் தொடர்ந்து பணியாற்றும்.

ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் � ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்� ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த� ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ� ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...