இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின்

மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் அதிகளவில் சந்தைபடுத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிரபல பிராண்டுகளுக்கு போட்டி போடும் வகையில் இந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில், ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை, 2014ல் அறிமுகம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் பல முயற்சிகளால், இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இதனால், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க அவை தயாராக உள்ளன. விரைவில் இந்த முயற்சிகள் துவங்கும்.

தொழில்கள் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை, இந்திய பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...