மக்களை முட்டாள்களாக்க முடியாது கங்கனா ரனாவத் பதிலடி

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது என்று காங்கிரசுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யான பிரியங்கா, பார்லிமென்ட்டில் முதல்முறையாக நேற்று தனது கன்னி உரையை ஆற்றினார். அவரது பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டி வந்த நிலையில், பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரச்னைகளை விட்டு விட்டு, கதைகளை பின்னி பேசியுள்ளார். யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, குற்றச்சாட்டுக்களை கூறலாம். பார்லிமென்டில் ராகுல் மற்றும் பிரியங்காவின் பேச்சு ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. அதற்கு முன் அவர்களின் தாயார் இதுபோன்று பேசுவார். தங்களின் தாயை விட சிறப்பாக பேசியிருக்கிறோம் என்று அவர்கள் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்.

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது. பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த போராட்டங்களும், சவால்களும் இருக்கும். பிரியங்காவுக்கு பேசுவதற்கு ஏதுமில்லை. இதன் காரணமாகவே, நாட்டில் அச்சப்படும் சூழல் இருப்பதாகக் கூறி, மக்களை தூண்டுவிடுகிறார். அவரது கொள்கையில் பலவீனமானவர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது பா.ஜ., தலைவர்களுடன் விவாதம் நடத்த முடியாதவர், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...