மக்களை முட்டாள்களாக்க முடியாது கங்கனா ரனாவத் பதிலடி

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது என்று காங்கிரசுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யான பிரியங்கா, பார்லிமென்ட்டில் முதல்முறையாக நேற்று தனது கன்னி உரையை ஆற்றினார். அவரது பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டி வந்த நிலையில், பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரச்னைகளை விட்டு விட்டு, கதைகளை பின்னி பேசியுள்ளார். யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, குற்றச்சாட்டுக்களை கூறலாம். பார்லிமென்டில் ராகுல் மற்றும் பிரியங்காவின் பேச்சு ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. அதற்கு முன் அவர்களின் தாயார் இதுபோன்று பேசுவார். தங்களின் தாயை விட சிறப்பாக பேசியிருக்கிறோம் என்று அவர்கள் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்.

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது. பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த போராட்டங்களும், சவால்களும் இருக்கும். பிரியங்காவுக்கு பேசுவதற்கு ஏதுமில்லை. இதன் காரணமாகவே, நாட்டில் அச்சப்படும் சூழல் இருப்பதாகக் கூறி, மக்களை தூண்டுவிடுகிறார். அவரது கொள்கையில் பலவீனமானவர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது பா.ஜ., தலைவர்களுடன் விவாதம் நடத்த முடியாதவர், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...