ஜாதியின் பெயரால் விஷத்தை விதைக்கும் எதிர்க்கட்சிகள் – மோடி குற்றச்சாட்டு

”நாட்டில் ஒவ்வொருவரும் வளர்ச்சியின் பலனை அனுபவித்து, வளர்ந்த நாட்டை உருவாக்க உழைக்கும் நேரத்தில், ஜாதியின் பெயரால் சிலர் விஷத்தை விதைக்க பார்க்கின்றனர்.

”இந்த சதியை முறியடித்து, நம் கிராமங்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பேணி காத்து, வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கிராமங்களின் பாரம்பரியம், கலாசாரம், தொழில் வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில், ‘கிராமிய பாரத மஹோத்சவ்’ என்ற பெயரில், ஜன., 4 முதல் 9ம் தேதி வரை, நாடு முழுதும் திருவிழாக்களை நடத்துகிறது மத்திய அரசு.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களது வருவாயை பெருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிராம மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதே இந்த அரசின் முன்னுரிமை; அதற்கேற்பவே பல திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்து வருகிறோம்.

அதற்காக, கிராமங்களில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

ஆனால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் விஷத்தை சிலர் விதைத்து வருகின்றனர். இந்த சதித் திட்டத்தை முறியடித்து, நம் கிராமங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கட்டிக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டின் வளர்ச்சியில் கிராமங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

கிராமிய பாரத மஹோத்சவ் நிகழ்ச்சிகளை டில்லியில் நேற்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை விமர்சிக்கும் வகையில், அவர் பேசியதாவது:

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்தே, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த, 10 ஆண்டுகளாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களது வருவாயை பெருக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிராம மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதே இந்த அரசின் முன்னுரிமை; அதற்கேற்பவே பல திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்து வருகிறோம். அதற்காக, கிராமங்களில் பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். ஆனால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் விஷத்தை சிலர் விதைத்து வருகின்றனர். இந்த சதித் திட்டத்தை முறியடித்து, நம் கிராமங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கட்டிக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...