ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சரத் பவார் பாராட்டு

“தன் சித்தாந்தத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே போல, நாமும் செயல்பட வேண்டும்,” என, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில், தன் கட்சி தொண்டர்களிடையே, சரத் பவார் பேசியதாவது:

ஹிந்துத்துவா அமைப்பின் சித்தாந்தத்திற்கு அசைக்க முடியாத விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ்., காட்டுகிறது. அதே போல, அந்த அமைப்பின் ஊழியர்களும் கொள்கை தவறாமல் ஒரே பாதையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.

நாமும் அவர்களை போல செயல்பட்டு, சத்ரபதி ஷாஹு மகாராஜ், மகாத்மா பூலே, அம்பேத்கர், யஷ்வந்த்ராவ் சவான் ஆகியோரின் சித்தாந்தங்களை பரப்ப வேண்டும்.

லோக்சபா தேர்தலில் வெற்றிக்கு பின், நாம் மனநிறைவு அடைந்தோம். அதே சமயம், ஆளும் மஹாயுதி கூட்டணியினர், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்ததால், சட்டசபை தேர்தலில் வென்றனர்.

இந்த தேர்தலில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்த பணிகளை எடுத்துரைக்க தவறியதே தோல்விக்கான காரணங்களில் ஒன்று. உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீதம் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...