திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி

‘திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன’ என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் நேற்று காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ரவி மலர் துாவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி கவர்னர் வெளியிட்ட அறிக்கை:

பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை, தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பய பக்தியுடனும் நினைவுகூர்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் ஒவ்வொரு தனி நபருக்கும், அமைப்புக்கும் பொருந்தக்கூடிய, ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.

பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நம் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில், நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும், ஒரு விரிவான நல்லொழுக்க குறியீட்டை அவர் வகுத்தார்.

திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், அவர் நம் அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே, அவர் தினமும் நினைவுகூரப்பட்டு, கொண்டாடப்பட வேண்டும்.

திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...