பாரதிய ஜனதா மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்’ என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . “தாமரை சங்கமம்’ எனும் பாரதிய ஜனதாவின் 5தாவது மாநில மாநாடு, வரும் 28 , 29ம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது .
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது : மத்தியிலும், மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி என்பதை முன்நிறுத்தி, இம்மாநாடு நடத்தபட உள்ளது. இதை உணர்த்தும்வகையில், மாநாட்டின் அரங்கமுகப்பு, “பார்லிமென்ட்’ மற்றும் தமிழக சட்ட சபை கட்டிட வடிவில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒருலட்சம் பேருக்கு இருக்கை வசதியுடன், 2.5லட்சம் பேர் பங்கேற்கும் அளவிற்கு இட வசதி செய்யபட்டுள்ளது.
மாநாட்டை பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி தொடங்கி வைக்கிறார். 28ம் தேதி மாலை நடக்கும் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா, மூத்த தலைவர் அத்வானி உரையாற்றுகிறார். பாரதிய ஜனதா ஆட்சி புரியும் 9 மாநிலங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள் குறித்து, மாநாட்டில் கண் காட்சி வைக்கப் படும்.
தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு துவக்கமான மதுரை மாநாடு, தமிழக அரசியலில் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.