பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . ”டெசோவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் , ஆக.,12ல் மாநாடை நடத்தபபோவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். ஆட்சியில் இல்லாத போது இலங்கை தமிழர்களை பற்றி அதிகம் கவலைப்படுகிறார்.
ஆட்சியிலிருந்து, மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் இருந்த போதும் , இதை பற்றி பேசவில்லை. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டதொகை செலவழிக்கப்பட வில்லை, என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசோ செலவுசெய்ததற்கான பட்டியலை தந்துள்ளது .
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை போன்று இந்துமதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபபட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கும் தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கவேண்டும்.
இதை வலியுறுத்திபாரதிய ஜனதா சார்பில் ஆக.,16 முதல் 18 வரை சென்னையில் தொடர்_உண்ணா விரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம் . மதுவால் கொலை, கொள்ளை பெருகிவருகிறது. காவல்துறையின் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்துவருகிறது. அவர்கள் அதிகாரமற்றவர்கள் போன்று செயல் படுகின்றனர். காவல்துறை அரசியல் தலையீடின்றி செயல்படவேண்டும்’ என கூறினார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.