பாரத் பந்த் ஸ்தம்பிக்கும் இந்தியா

பாரத் பந்த் ஸ்தம்பிக்கும்  இந்தியா டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டித்து பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பாக இன்று நாடு தழுவிய பந்த் நடைபெறுகிறது . இதனால் நாடுமுழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதை கண்டித்து பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று நாடுதழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக. பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் முக்கிய தொழிற் சங்கள் பந்த்தில் கலந்துகொள்ள போவதாக அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்கப்படலாம் என தெரியவருகிறது .

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பந்த்திற்கு பலத்த ஆதரவு உள்ளதால், தமிழகத்தில் இருந்து செல்லும் பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

தமிழகத்தில் பந்த்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 1.15 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. மும்பையிலும், டெல்லியிலும் உள்ள வியாபாரிகள் அமைப்புகள் பந்த்திற்கு பலத்த ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் டீசல் விலை உயர்வை கண்டித்து நள்ளிரவு முதல் பந்த் நடத்த ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனால் 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள 75 லட்சம் லாரிகள் இயங்காது. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...