மத்திய அமைச்சரவை மாற்றம் ஒரு வீண் நடவடிக்கை

மத்திய அமைச்சரவை மாற்றம் ஒரு வீண் நடவடிக்கை மத்திய அமைச்சரவை மாற்றம் ஒரு வீண் நடவடிக்கை, நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் அரசின் கருவூலம் நிரம்பும் என்றால், அதன் மூலமாக ஊழலையும் எதிர்க்கமுடியும் என்றால் அதைச்செய்ய பாரதிய ஜனதா தயங்காது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,”திரிணமூல் காங்கிரஸ் ஆதரவை திரும்ப பெற்ற பொழுதே மத்திய அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அமைச்சரவை மாற்றம் என்பது ஒரு வீண் நடவடிக்கை என பா.ஜ.க. கருதுகிறது.

இரண்டு வருடத்துக்கு முன்பு, 2ஜி விவகாரத்தை முன் வைத்து நாங்கள் நாடாளுமன்ற குளிர்காலதொடரை முடக்கியதால், அரசுக்கு ரூ.2 லட்சம்கோடி லாபம் கிடைத்தது. அதே போன்று நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் அரசின் கருவூலம் நிரம்பும்என்றால், அதன் மூலமாக ஊழலையும் எதிர்க்கமுடியும் என்றால் அதைச்செய்ய பாரதிய ஜனதா தயங்காது. ஐ.மு.கூட்டணியின் இமாலய ஊழல்களை பார்த்துக்கொண்டு எங்கள் கட்சியால் மௌனமாக இருக்கமுடியாது.

பிரதமர் மன்மோகன்சிங் ஒரு பொருளாதார நிபுணராகவும், நேர்மை யானவராகவும் கருதப்படுகிறார். ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டம் அரசில் இந்தநிலை மாறிவிட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் படித்த அவர் பல உயர்பதவிகளை வகித்தவர் . ஆனால், 9.2 % வளர்ச்சியை எட்டுவோம் என அவர் வாக்குறுதி தந்ததற்கு மாறாக, 5.2 % வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது.

சோனியா காந்தி மருமகன் ராபர்ட்வதேரா மேற்கொண்ட அனைத்து நிலபேரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள பட வேண்டும். பாஜக.வில் மிகச் சிறந்த முதல்வர்கள் உள்ளனர். அவர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது. குஜராத், இமாசல பிரதேசம் சட்ட சபை தேர்தல்களில் எங்கள் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும். அது மத்திய அரசுமீதான கருத்து கணிப்பாக அமையும்.

பாஜக. தலைவர் கட்கரி மீதான புகார்களைப் பொறுத்தவரை, புகார்வெளியான முதல் நாளே அரசு அல்லது எந்த வெளி விசாரணை அமைப்பின் விசாரணைக்கும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு எங்களுக்கு எதிராக இருந்த போதிலும் அவர் அப்படிக்கூறினார். ஆனால், தங்கள்மீது புகார்கள் வந்த போது விசாரணைக்கு தயார் என காங்கிரஸை சேர்ந்த எந்த தலைவரும் கூறவில்லை என ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...