வந்தே மாதரம் ஒரு வினோதமான மந்திரம் சுரேந்திரநாத் பானர்ஜி

  வந்தே மாதரம் ஒரு வினோதமான மந்திரம்  சுரேந்திரநாத் பானர்ஜிசுரேந்திரநாத் பானர்ஜி அரசாங்க சிவில் அலுவலராக இருந்து மக்களுடன் உரிமைக்காக பாடுபடும் எண்ணத்துடன் தனது உயர்பதவியினை துறந்தவர், இவர் "வங்காளி" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்தார்.

1883ல் ஆங்கிலேய நீதிபதி ஒருவர் தமது தீர்ப்பு ஒன்றில
் ஹிந்துக்களின் விக்ரஹ வழிபாட்டினை அவதூறு செய்து எழுதியற்காக சுரேந்திரநாத் பானர்ஜி தமது வங்காளி பத்திரிகையில் அவரைத்தாக்கி எழுதியவர், அதற்காக இரண்டு மாதம் சிறைவாசம் சென்றவர்,

1905 கர்ஸானின் வங்கப் பிரிவினைக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சுரேந்திரநாத் பானர்ஜி தமது வங்காளி பத்திரிகையில் " தேசிய எழுச்சிக்கு ஆங்கில அரசின் இந்த விபரீத திட்டம் வழி வகுத்து விட்டது. இது ஒரு மாபெரும் அபாயம் என்று ஆங்கிலேயர் விரைவில் உணர வேண்டும்," என்று கர்ஜனை செய்தார்,

இப்போது உள்ள தலைவர்கள் பலர் சொல்லும் வசனம் " நான் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்" இந்த வசனத்தினை முதன்முதலாக சொல்லியவர் மஹாகவி பாரதியார்,

அன்றைய சுதேசமித்திரனில் மஹாகவி பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்றில் "சுரேந்திரநாத் பானர்ஜி ஒரு சக்தி வாய்ந்த தலைவர், மாபெரும் சிம்ம கர்ஜனைக்கு சொந்தக்காரர், அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்" என்று வானளாவி புகழ்ந்து தள்ளிவிட்டார்,

நாடு முழுக்க வங்கப்பிரிவினைக்கு எதிர்ப்பு, வங்காளத்தில் எல்லை கடந்த எதிர்ப்பு, எங்கு பார்த்தாலும் வங்க மக்கள் "வந்தே மாதரம் , வந்தே மாதரம்" என்று என்று கோஷமிட்டதைக் கண்டு பிரிட்டிஷ்காரர்கள் நடுநடுங்கிப் போய்விட்டார்கள்,

இதனைக் கண்ட சுரேந்திரநாத் பானர்ஜி இந்த வந்தே மாதரம் ஒரு வினோதமான மந்திரம், இதனை அன்புடன், ஆவேசத்துடன் உச்சரிக்கும் தொண்டர்களுக்கு அபரிமிதமான துணிச்சலையும், எத்தனை முறை அடித்தாலும் அதனால் தளர்ந்து போகாத ஆற்றலையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான மந்திரம், அதே சமயம் தேச விரோதிகளுக்கும் அந்நியர்களுக்கும் அச்சத்தினை தரக்கூடிய ஒரு சிம்ம சொப்பனமான மந்திரமாக இன்றையதினம் திகழ்கிறது, என்று கொக்கரித்தார்,

இந்த உரையைக் கேட்ட ஆங்கில அரசு "வந்தேமாதர கோஷம் சட்ட விரோதமானது, எனவே வந்தேமாதரம் கோஷம் போடுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்", என்று கூறி வந்தேமாதரத்தினை தடை செய்தனர்,

நன்றி ; ராம் குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...