சங்கமே எங்கள் குடும்பம்.

 சங்கமே எங்கள் குடும்பம். ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து வாஜ்பாய் ஒரு நிகழ்ச்சியில் பேசியதன தொகுப்பு ; குவாலியரில், 1939ம் ஆண்டு ஆர்ய குமார் சபா எனும் ஆர்ய சமாஜத்தின் இளைஞர்பிரிவின் மூலம் நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு முதன் முதலில் தொடர்புகொண்டேன். நான் தீவிரமான சனாதனக் குடும்பத்திலிருந்து வந்தேன். ஆனால், நான் வாரா வாரம்

 

நடக்கும் ஆர்யகுமார் சபாவின் 'சத்சங் ' கூட்டங்களில் கலந்துகொண்டேன். ஒருமுறை, ஆர்ய குமார் சபாவின் மூத்த பணியாளரும், பெரும் சிந்தனாவாதியும், சிறந்த அமைப் பாளருமான ஸ்ரீபூதேவ் சாஸ்திரி அவர்கள் எங்களை, 'மாலை நேரங்களில் என்னசெய்கிறீர்கள் ? ' என கேட்டார். நாங்கள், 'ஒன்றும் செய்வதில்லை ' என பதிலலித்தோம் . காரணம், ஆர்ய குமார் சபா ஞாயிறு காலைகளில் வழக்கமாகக் கூடிக் கொண்டிருந்தது. அப்போது அவர்_எங்களை 'ஷாகா ' (கிளை)க்கு செல்லும் படி கேட்டுக் கொண்டார். ஆகவே, நாங்கள் குவாலியரில் ஷாகாவுக்குச்செல்ல ஆரம்பித்தோம். இதுவே எனது முதல் ஆர்எஸ்எஸ் தொடர்பு. குவாலியரில் அப்போது தான் ஷாகா ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அதில் மஹாராஷ்டிர பையன்கள்_மட்டுமே இருந்தார்கள். இதனால், எல்லா ஸ்வயம் சேவக்குகளும் மராத்தியிலேயேபேசினார்கள். நான் ஷாகாவுக்கு தொடர்ந்துசெல்ல ஆரம்பித்தேன். ஷாகாவில் விளையாடப் படும் விளையாட்டுகளும், வாராந்தரி 'பெளதிக் ' (சொற்பொழிவுகள்)உம் எனக்குப்பிடித்திருந்தன.

ஸ்ரீநாரயண்ராவ் தார்த்தே என்ற ஒருபிரசாரகர் நாக்பூரிலிருந்து வந்து ஷாகாவை ஆரம்பித்திருந்தார். அவர் உண்மையிலேயே ஒருசிறப்பான மனிதர். வெகு எளிமை யானவர், சிந்தனாவாதி, சிறந்த அமைப்பாளர். நான் இன்றுள்ள நிலைக்குக்காரணம் ஸ்ரீதார்த்தே அவர்கள் என்னை உருவாக்கிய விதமேயாகும். அவருக்கு அடுத்த படி நான் தீன்தயாள்  உபாத்யாயா அவர்களாலும், பாவுராவ்தேவரஸ் அவர்களாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்தேன். அப்போது குவாலியர் கிளை பாவு ராவ்ஜி அவர்களுக்கு கீழ் இல்லை. ஆனால் ஒரு முறை அவர் குவாலியருக்கு அப்போதைய பெளதிக்பிரமுக்-ஆக இருந்த ஸ்ரீபாலாசாஹேப் ஆப்தே அவர்களுடன் வந்திருந்தார். ஆப்தே ஜி அவர்கள் மெதுவாகப்பேசுபவர். வெகுவிரைவில் நாங்கள் அவரால் ஈர்க்கப்பட்டோம்.

நான் அவருடன் வெகுசில நிமிஷங்களே பேசினேன். ஆனால், அதேவருடம் (1940), நான் முதல்வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாம் ( Officers ' Training Camp ) சென்ற போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்குசென்றது பயிற்சி முகாம் முடிவுவிழாவில் கலந்துகொள்ள. பயிற்சி எடுத்துக் கொள்ள அல்ல. டாக்டர் ஹெக்டேவார் அவர்களும் அங்கு அதேநேரத்தில் வந்திருந்தார்கள். நான் அவரை அங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். பிறகு டாக்டர்ஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது நான் பார்க்கச்சென்றேன். 1941இல் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது முதலாம் வருட அலுவலகத்தினர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டேன். 1942இல் நான் இடை நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டாம்வருட அலுவலகத்தினர் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டேன். நான் பிஏ படித்துக் கொண்டிருந்த போது, 1944இல் மூன்றாம் வருட பயிற்சியை மேற்கொண்டேன்.

நான் 'ஹிந்து தன்-மன் ஹிந்து ஜீவன் '( ஹிந்து உடல்-மனம் ஹிந்து வாழ்க்கை) கட்டுரையை எழுதும் போது நான் பத்தாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். குவாலியரில் நான் இளங்கலை பட்ட படிப்பு முடித்ததும், கான்பூரில் டிஏவி கல்லூரியில் எம்.ஏ படித்தேன். அப்போது குவாலியரில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க கல்லூரி இல்லை. பிரிவினை காரணமாக, என்னால் சட்டப் படிப்பு படிக்க முடியாமல்போனது. பிறகு, 1947இல் நான் எனது கல்வியை விட்டு விட்டு ஆர்எஸ்எஸில் முழு நேர ஊழியனாகச் சேர முடிவுசெய்தேன். 1947வரை நான் ஷாகா அளவில் ஆர்எஸ்எஸ் வேலைகளை செய்துகொண்டே படிப்பையும் கவனித்து கொண்டிருந்தேன். நான் அப்போது 1942இல் 'இந்தியாவை விட்டுவெளியேறு ' இயக்கத்தில் கலந்து கொண்டதால் சிறைப்பட்டேன். அச்சமயம் எனது இடைநிலைத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். நான் ஆக்ராவில் இருக்கும் எனது பூர்வீக கிராமமான பாடேஷ்வரில் கைதுசெய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 16.

எனது தந்தையார் ஆர்எஸ் எஸ் இயக்கத்தால் ஈர்க்கப் பட்டவரல்ல. ஆனால் எனது அண்ணன் ஈர்க்கப் பட்டிருந்தார். அவர் ஷாகாவுக்கு செல்வார். ஒருமுறை குளிர் கால பயிற்சி முகாமுக்கு சென்ற போது பிரச்னையை உருவாக்கினார். அவர், 'மற்ற ஸ்வயம் சேவக்கு களுடன் சேர்ந்து நான் உணவருந்தமுடியாது. எனக்கான உணவை நானே தயாரித்து கொள்வேன் ' என்றார். எவ்வாறு ஆர்எஸ்எஸ் இந்த பிரச்னையைக் கையாண்டது பாருங்கள். அந்த பயிற்சிமுகாமின் சர்வாதிகாரி (சுப்பரிண்டண்ட்) அவரது வேண்டு கோளுக்கு இணங்கி அவர் தம் உணவை தயாரித்துக் கொள்ள வேண்டிய எல்லாப் பொருட்களையும் அவருக்குக்கொடுத்தார். என் அண்ணன் குளித்து விட்டு, தன் பூணூலை சரிசெய்து கொண்டு தன் உணவை தயாரிக்க ஆரம்பித்தார். முதல் நாள் அவரே தனது உணவை தயாரித்துக் கொண்டார். அடுத்த நாள், அவரால் தயாரிக்க முடிய வில்லை. எல்லா ஸ்வயம் சேவக்குகளுடன் இணைந்து உணவருந்த வரிசையில் நின்றுகொண்டார். 44 மணி நேரத்தில் அவர் மாறி விட்டார்.

ஆர்எஸ்எஸ் தனி மனிதர்களை மட்டும் மாற்று வதில்லை. அது பொதுமனத்தையே மாற்றுகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒழுக்க நெறிகள். நமது ஆன்மீக பாரம் பரியத்தில், ஒரு தனிமனிதன் எந்தவித உயரத்தையும் அடையமுடியும். சரியான யோகத்தைக் கைக் கொள்வதன் மூலம், யாரும் தான் உணர்ந்து நிர் வாணத்தை அடையலாம். ஆனால் சமூகத்தை என்னசெய்வது ? யாரும் பொதுவாக சமூகத்துக்கான தனது கடமையை பற்றி சிந்திப்பதில்லை. ஆர்எஸ்எஸ் முதன் முறையாக, தனிமனிதர்களை மாற்றுவதன் மூலம் சமூகத்தை மாற்றமுடியும் என சிந்தித்தது. பயிற்சிமுகாமில் இருந்த சர்வாதிகாரி அவரைத் திட்டியிருந்தாலோ, அவரது உணவை தானே தயாரித்துக் கொள்ள அனுமதிக்காமல் இருந்தாலோ, அவரது ஆன்மீகவளர்ச்சி தடைபட்டிருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸின் உள்ளே அவர் 44 மணி நேரத்துக்குள் மாறிய மனிதராகி விட்டார். இது தான் ஆர்எஸ்எஸின் 'ரகசிய முறை '. இவ்வாறு தான் சமூகம் மாறுகிறது. இது ஒரு நீண்டவழி. ஆனால், இதற்கு எந்தவித குறுக்குவழியும் கிடையாது; திடார் ரசவாத முறையும் கிடையாது.

அமைப்பினுள்ளே தீண்டாமை இல்லை என்பதற்காக காந்திஜி ஆர்எஸ்எஸ்,ஸை பாராட்டியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் மட்டுமே சமூகத்தை சீரமைக்கிறது. மற்றஇயக்கங்கள் எல்லாம் சமூகத்தை, தனி அடையாளங்களின் மூலமும், வெவ்வேறு 'ஆர்வங்கள் ' மூலமும், சிறப்பு 'அந்தஸ்துகள் ' மூலமும் பிரிக்கின்றன. தீண்டத் தகாதவர்கள் என கூறப்படுபவர்களின் 'தனித்துவத்தை ' ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பதன் மூலம், இவைகள் தொடர்ந்து தீண்டாமையை ஊக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. 'நீங்கள் அவமதிக்கப் படுகிறீர்கள்; உங்களுக்கு சமூகத்தில் இடம்கிடையாது ' என்பன போன்று. ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு இரண்டு முக்கியவேலைகள் இருக்கின்றன.

முதலாவது இந்துக்களை அமைப்பு ரீதியான முறையில் ஒன்று படுத்துவது. வலிமையான இந்து சமூகத்தை கட்டமைப் பதற்காகவும், இறுக்கமாக ஒன்று பட்ட சமூகத்தை உருவாக்குவதற்காகவும், ஜாதிபோன்ற செயற்கை வித்தியாசங்களைத் தாண்டி மேலே வரவேண்டும். அடுத்தவேலை இந்துக்களல்லாதவர்களாக இருக்கும் முஸ்லீம்களையும் கிரிஸ்தவர்களையும் தேசீயநீரோட்டத்துக்கு கொண்டு வருதல். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். யாரும் அதற்கு மறுப்புச்சொல்ல உரிமை இல்லை. நாம் மரங்களையும், விலங்குகளையும், கற்களையும் இன்னும் பலவற்றையும் கும்பிடுகிறோம். நம்மிடம் கடவுளைக்கும்பிட நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. அவர்கள் கடவுளை கும்பிட எங்குவேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந் நாடு அவர்களாலும் தாய் நாடாகப் பார்க்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு இந்த நாட்டைப்பற்றிய தேச பக்தி உணர்வு இருக்கவேண்டும். ஆனால், உலகத்தை 'தாருல் ஹாராப் ' (இஸ்லாம் அல்லா தாரின் சமூகம்) என்றும், 'தாருல் இஸ்லாம் ' (இஸ்லாமியரின் சமூகம்) என பிரிக்கும் இஸ்லாமியக்கருத்து இதன் குறுக்கேவருகிறது . முஸ்லீம்கள் பெரும் பான்மையாக இல்லாத நாட்டிலும், வளமையுடன் இருப்பதற்கும், வளர்வ தற்குமான கலையை இஸ்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். என்ன வாயினும், அவர்களும் இங்கேதான் வாழவேண்டும். ஆகவே அவர்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சி முஸ்லீம் பிரச்னையை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் 'சிறுபான்மையினரை மகிழ்ச்சி படுத்தும் கொள்கையை ' (policy of appeasement) தொடர்ந்து கடைபிடித்துவருகிறார்கள்.

ஆர் எஸ் எஸின் முதல் வேலையான, இந்து சமூகப்புத் துணர்வு இன்று அடையப் பட்டிருக்கிறது என கருதுகிறேன். முன்பு ஆக்கிரமிப்புகளின்போது இந்துக்கள் வளைந்துகொடுத்தார்கள், இன்று வளைந்து கொடுப்பதில்லை. இந்து சமூகத்தின் இந்தமாற்றம் வரவேற்க தக்கது. புதிதாக கண்டு கொள்ளப்பட்ட சுய உறுதிப் பாட்டோடு ஏராளமான மாற்றங்களும் வந்திருக்கின்றன. இது நம்மை தக்கவைத்துக் கொள்வதற்கான கேள்வி. இந்து சமூகம் விரிவடையாமல் போயிற்றென்றால், அது இன்னொரு உயிர் வாழும் பிரச்னையைச் சந்திக்கநேரிடும்.

நாம் விரிவடைய வேண்டும். மற்றவர்களையும் நம்மோடு அழைத்துச்செல்ல வேண்டும். இன்று யாதவர்களும், ஹரிஜன் என அழைக்கப் பட்டவர்களும் நம்மோடு கூடவருகிறார்கள். என்ன இருந்தாலும், நாம் இந்துக்களாகவே வாழவேண்டும். ஒருமுறை யாதவர் தலைவர் என்னிடம் வந்துசொன்னார், 'யாதவர்களை பழிக்காதீர்கள். எல்லா யாதவர்களும் முலயாம் சிங் கோடும், லாலூ பிரசாத் தோடும் இல்லை. பக்குவப் பட்ட யாதவர்கள் அவர்களை விரும்பு வதில்லை. நீங்கள் எங்காவது ராஜ்புட், குர்மி, குஜ்ஜார் முஸ்லீம்களை பார்க்கலாம். ஆனால் யாதவமுஸ்லீம் ஒருவரை கூட பார்க்க முடியாது. யாதவர்கள் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். இந்த யாதவ-முஸ்லீம்கூட்டணி வெறும் ஓட்டுக்காகபோடும் கூச்சல் அன்றி வேறல்ல ' என்றார்.

என்னுடைய நீண்ட ஆர்எஸ்எஸ் தொடர்புக்கு எளிய காரணம், நான் சங்கத்தை நேசிக்கிறேன் என்பது தான். அதன் கொள்கையை விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அது மக்களிடமும், அதனுள் இருப்பவர்கள் ஒருவருக் கொருவரும் கொண்டுள்ள அன்பே நான் ஆர்எஸ்எஸ்.,ஸை விரும்பக் காரணம்.

நான் லக்னெளவில் இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது சோஷலிஸ இயக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது மூத்த சோஷலிஸ தலைவர் ஒருவர் நோய் வாய்ப்பட்டார். அவர் தன்வீட்டில் தனியே இருந்தார். அவரது உடல் நலத்தை யாரும் விசாரிக்க செல்லவில்லை. ஆச்சார்ய நரேந்திரதேவ் அவர்கள் இதை அறிந்து அவரது வீட்டுக்குச்சென்று அவரை பார்த்தார். ஆச்சார்யா அப்போதுசொன்னார், 'என்ன சகோதரத்துவம் இந்தசோஷலிஸ கட்சியில் ? ஒருவரும் உங்களைவந்து பார்க்கவில்லை. இது ஆர்எஸ்எஸ்ஸில் எப்போதும் நடக்காது. ஒரு ஸ்வயம் சேவக் உடல் நலம் குன்றி ஒருநாளைக்கு ஷாகாவுக்குச் செல்லவில்லை என்றாலும், அவரது நண்பர்கள் உடனே அவரது வீட்டுக்குச்சென்று அவரது நலம் பற்றிவிசாரிப்பார்கள் '. நான் அவசர நிலையின் போது உடல் நலம் குன்றி இருந்த போது, என்னுடைய வீட்டார் யாரும் என்னை வந்து பார்க்க வில்லை. அப்படிப் பார்த்தால், அவர்களை கைது செய்து விடுவார்கள் என பயந்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் மட்டுமே எனக்கு உதவினார்கள். தொடர்பும், சகோதரத்துவ உணர்வும் எவ்வாறு ஆர்எஸ்எஸ்.,ஸில் இருக்கின்றது என்பதை பாருங்கள். உண்மையில் சங்கமே எங்கள்குடும்பம். நாமெல்லோரும் ஒன்று.

ஆரம்பத்தில் சமூகத்தில் எல்லா தரப்புகளிலும் நம்வேலையை பரப்ப முடியவில்லை. ஏனெனில் நம்மிடம் அப்போது அவ்வளவு இயக்கத்தினர் இல்லை. 'மனிதனை உருவாக்குவதே ' ஆர்எஸ்எஸ்.,ஸின் முதன்மையான வேலை. நம்மிடம் இப்போது ஏராளமான இயக்கதினர் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் தொடர்புகொண்டு எல்லா துறைகளிலும் பரவிவருகிறார்கள். எல்லா பகுதிகளிலும் மாற்றங்கள் நடந்துவருகின்றன. 'மனிதனை உருவாக்கும் ' வேலை எப்போதும் நிறுத்த பட்டுவிடக் கூடாது. இது தொடர்ந்துநடக்கும். இது தொடர்ந்து நடந்தாகவேண்டும். இதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...