உபி., சட்ட சபை தேர்தலில் வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால்தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டுக்கு முன்பே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க உள்ளதாகவும் திக்விஜய் சிங் புதிதாக காரணத்தை கண்டு பிடித்திருக்கிறாரே ?
அப்படியே மத்திய பிரதேசத்துல ஏன் ஆட்சியை கோட்டை விட்டாருனும், பீகாரில் 243 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே பிடித்து 239 தொகுதிகளைக் எப்படி கோட்டைவிட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தி இருக்கலாம். கடந்த ஒன்பது வருடங்களாக நிகழகால காங்கிரஸ் அரசும் , அதன் எம்.பி.க்களும் மக்களுக்கு செய்யாததை. இவர்களது எதிர்கால வேட்பபாளர்கள் ஒரு வருடத்தில் செய்துவிடுவார்களா?.
எல்லாம் ஒரு பில்டப் . வரும் 2013 ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது . அதில் தனது மகனை முதல்வர் வேட்ப்பாளறாக்கும் ஆசையும் உள்ளது. அதற்க்கு முன்னோடியாக இப்போதே முதல்வர் வேட்ப்பாளறை அறிவிக்க வைப்பதற்க்கான ராஜ தந்திரமாககூட இருக்கலாம். எது எப்படியோ யாரை யாரையோ குறை கூறி , எதை எதையோ பேசி அடிக்கடி செய்தில் இடம்பிடித்து விடுகிறார்.
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.