2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும்

2024ல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாகவரும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

வேலுார் மாவட்டத்தில் நடக்கும், நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை வேலுாரில் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல்இல்லாத நிர்வாகம் அமைய, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். நீட்தேர்வால் அரசு பள்ளியில் படித்த 517 மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். கொரோனாவின் போது, 450 ரயில்களில் ஆக்சிஜனை எடுத்துவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில்தான் 172 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.கிருஷ்ணா- கோதாவரி- தென்பெண்ணை நதிகளை இணைக்க 85 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதால், வேலுார்மாவட்டம் பயன்பெறும்.

2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை பொருத்துத்தான் இதுஅமையும்.வேலுார் மாநகராட்சியில் 1,234 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊழலின் காரணமாக இத்திட்டம் இன்னமும் முடியவில்லை. ஊழல் இல்லாத ஆட்சிஅமைய பா.ஜ., வால் மட்டும்தான் முடியும்.

தி.மு.க., மீது மக்களுடைய கோபம் எந்தளவு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டதால் தான், நேரடியாக வராமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...