2024ல், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாகவரும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
வேலுார் மாவட்டத்தில் நடக்கும், நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை வேலுாரில் பேசியதாவது:
தமிழகத்தில் ஊழல்இல்லாத நிர்வாகம் அமைய, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். நீட்தேர்வால் அரசு பள்ளியில் படித்த 517 மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். கொரோனாவின் போது, 450 ரயில்களில் ஆக்சிஜனை எடுத்துவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார்.
இந்தியாவில்தான் 172 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.கிருஷ்ணா- கோதாவரி- தென்பெண்ணை நதிகளை இணைக்க 85 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதால், வேலுார்மாவட்டம் பயன்பெறும்.
2024 ல் எம்.பி., தேர்தலும், எம்.எல்.ஏ., தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை பொருத்துத்தான் இதுஅமையும்.வேலுார் மாநகராட்சியில் 1,234 கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊழலின் காரணமாக இத்திட்டம் இன்னமும் முடியவில்லை. ஊழல் இல்லாத ஆட்சிஅமைய பா.ஜ., வால் மட்டும்தான் முடியும்.
தி.மு.க., மீது மக்களுடைய கோபம் எந்தளவு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டதால் தான், நேரடியாக வராமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |