தேர்தல் கூட்டணிக்கு வேறு காரணங்களைகூறுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை

 தேர்தல் கூட்டணிக்கு வேறு காரணங்களைகூறுவது குறித்து  எங்களுக்கு கவலையில்லை தேர்தல் கூட்டணிக்கு, வேறுகாரணங்களை முதல்வர் ஜெயலலிதா கூறுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை, காவிரி விவகாரத்தில் தமிழக பாரதிய ஜனதா மீது பழி சுமத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, காவிரி விவகாரத்தில் பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றன. இதனால், இந்தகட்சிகளோடு, லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்காமல், தனித்து போட்டி யிடுவோம் என்று , குறிப்பிட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி விவகாரத்தில், பாரதிய ஜனதாவை குறை கூறுவதை ஏற்கமுடியாது.

லோக் சபா தேர்தலில், அதிமுக., எந்த நிலை எடுத்தாலும், அது குறித்து நாங்கள் கருத்துசொல்ல விரும்பவில்லை. அது, அவர்கள் கட்சியின் முடிவு; அதில், தலையிட முடியாது.ஆனால், காவிரி விவகாரத்தில் , பாரதிய ஜனதா துரோகம் செய்துவிட்டது என்று , முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது.

காவிரிப் பிரச்னை உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்பே, இரண்டு மாநில அரசுகளும் பேச்சுநடத்த வேண்டும். மத்திய அரசும் தலையிட்டு, உரிய முடிவெடுக்கவேண்டும் என்று , தமிழக பா.ஜ., வலியுறுத்தியது. நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுகொள்ளாமல் , தண்ணீர் தரமாட்டோம் என்று , கூறிய கர்நாடக அரசை கண்டித்ததோடு, தமிழக முதல்வர் எடுக்கும் எந்தமுடிவுக்கும், துணையாக இருப்போம் என்றும் , தமிழக பாரதிய ஜனதா அறிவித்தது. அனைத்து கட்சிகளும் கர்நாடகத்தில் இணைந்து செயல் பட்டன. ஆனால், தமிழகத்தில் அனைத்து கட்சிகளை இணைத்து கூட்டம் நடத்தவேண்டும் என்றும தமிழக எம்பி.,க்களை ஒன்றிணைத்து, பிரதமரை சந்திக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

இதற்கெல்லாம் அதிமுக., அரசு மசிய வில்லை. மேலும், கர்நாடகத்தில் இருக்கும் அதிமுக., தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று , கர்நாடகத்தில் போராட்டம் நடத்த வில்லை.கர்நாடகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் ஒன்றாகநின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா மீது பழி சுமத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...