1.1/2–ஆண்டுக்கு முன்பே உண்மையை உரைத்த அம்மாவுக்கு நன்றி

1.1/2--ஆண்டுக்கு முன்பே உண்மையை உரைத்த அம்மாவுக்கு நன்றி ஆங்கில புத்தாண்டு அருமையாகவே தொடங்கியுள்ளது..பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது,.."ஊன்றுகோல்லில்லாமல் நம் வெற்றிப் பயணம் தொடரும் " என்று சென்னை கூட்டத்தில் சூளுரைத்த நம் தலைவர் பொன்னாரின் வாக்கு உண்மையாகிவிட்டது.

மின்வெட்டினாலும், பஸ்கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் மக்கள் செல்வாக்கை இழந்த அம்மாவை …எப்படி தூக்கி சுமக்க முடியும் என கவலை பட்டுக்கொண்டிருந்த பாஜகவிற்கு அம்மாவின் அறிவிப்பினால் ஏக குஷி..

அம்மா திமுகவோடு கூட்டணி வருமா? வராதா? என தினம் தினம் பத்திரிக்கைகளில் தொடர்ந்த விவாதத்தினால், "மண்டை குடைச்சலில் " இருந்த பாஜக தொண்டனுக்கு பெரும் நிம்மதி..

டெல்லியிலிருந்து சென்னை வரும் நம் தேசிய தலைவர்களெல்லாம் மாற்றி மாற்றி மரியாதை நிமித்தமாக போயஸ் தோட்டத்துக்கு செல்வதும்……கமலாலயம் அதை "வெறுமனே " பார்த்துக்கொண்டு இருந்ததற்கும் முற்றுப்புள்ளி வைத்த அம்மாவுக்கு நன்றி

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத "அமைப்புச்செயலாளர் " எனற "பொறுப்பு" போட்டு, அவருக்குக்கீழ் ஆயிரக்கணக்கானோர் ராப்பகலாக, வேலை பார்த்து, தொண்டர்களை தூங்க விடாமல், "இதைச்செய்—, அதைக்கொடு, " என அமைப்பு, ரீதியாக வேலைவாங்கி,கட்சி தன் காலில் நிற்க,பயிற்சிகளும், பௌதிக்களும், கொடுத்த பிறகு,எங்கே நமது வெற்றியை அம்மா அபகரித்து விடுவாரோ என நாம் பயந்தபோது ….தானாக விலகிக்கொண்ட அம்மாவிற்கு நன்றி..

நல்ல வேளை அம்மா பெரிய மனது பண்ணி ஒண்ணரை வருடத்திற்கு முன்பே உண்மையை போட்டு உடைத்தார்கள்..இதனால்,மின்வெட்டிற்கெதிரான போராட்டம் முதல் பல போராட்டங்களை நடத்த பாஜகவிற்கு வாய்ப்பளித்த அம்மாவிற்கு சிறப்பு நன்றி.

காங்கிரசோடு சேர்வதற்கு அம்மாவிற்கு தயக்கம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.செல்லாக்காசாகிப்போன காங்கிரஸ் ஊழல்களின் மகாயக்ஞத்தினால்,  தோற்று துவண்டு போய் விட்டது.என்பதை புரிந்து கொண்ட அம்மாவின் முடிவு சரிதான்…

பாஜகவின் மீது அம்மாவிற்கு காவிரிதான் கோபம் என்றால்…. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து ஷெட்டர்..ஷட்டரை திறந்து விட்டாரே..ஆர்ப்பாட்டம் நடத்தி கெடுத்தது யார் ?…கவுடாவும் காங்கிரசும்தானே.

இந்த உண்மை அம்மாவிற்கு தெரியாமலா இருக்குமா?..பின் ஏன் இந்த அறிக்கை?…தமிழினத்தலைவர் சும்மாவா இருப்பார்?..தமிழனுக்கு தண்ணீர்தராத பாஜகவோடு கூட்டா? என அம்மாவை "ஐய்யா" கிழித்தெடுத்துவிடுவார்..என்ற பயமும் இருக்குமோ?

அல்லது மோடி பிரதமாவது நிச்சயம்…தன்னைப்போல ஒரு சாதாரண மாநில முதல்வருக்கு இந்த அந்தஸ்தா?…எதுவாக இருந்தாலும்..அது தனக்கு…தனக்குமட்டுமே…வரவேண்டும்…என்ற அம்மாவின் மனநிலையால்தான் இந்த அறிக்கையோ?

அல்லது…அம்மாவுக்கு துதிபாடி, இப்போதே, கூட்டணி பஸ்ஸில் இடம் பிடிக்க, "துண்டு போட்டு விட்ட" தா.பாண்டியன்…ஜி.ராமகிருஷ்னன். போன்ற மார்க்ஸிஸ்ட்களை, விலக்க வேண்டி வருமோ என்கிற அச்சமோ?

எதுவாக இருந்தாலும் "வெகுவாக மக்கள்  விரோதத்தை " சம்பாத்தித்த அம்மாவை….வெகுவாக மக்கள் ஆதரவை சம்பாதித்த பாஜக தூக்கி சுமக்க வேண்டி ய சூழலை உருவாக்காமல் ….நம்மை காப்பாற்றிய அம்மாவிற்கு மீண்டும் நன்றி..,

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...