காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கலவரங்களே நடக்கவில்லையா?

 குஜராத் கலவரத்தை வைத்துக் கொண்டு, திட்டமிட்டு சதி செய்து பாஜக மீது களங்கமும், பழியும் சுமத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கலவரங்களே நடக்கவில்லையா?. மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல் நடத்தினோம் என யாராவது குற்றம் சுமத்த முடியுமா? என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுதில்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில், ராஜ்நாத்சிங்கை இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, அவர்களிடம் ராஜ்நாத்சிங் பேசியதாவது: மக்களை பிளவுப்படுத்தும் மற்றும் வேற்றுமைப்படுத்தும் அரசியலில் பாஜக.,வுக்கு நம்பிக்கை கிடையாது.

திட்டமிட்ட சதிமூலம் பாஜக தொடர்ந்து பழி சுமத்தப்பட்டும் வருகிறது. வாஜ்பாய் மத்தியில் பிரதமராக இருந்த போது நீங்கள் அனைவருமே எங்கள் ஆட்சியை நேரடியாக பார்த்திருப்பீர்கள். அப்போது, மனிதர்களிடையே வேற்றுமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல் நடத்தினோம் என யாராவது குற்றம் சுமத்த முடியுமா?

ஹிந்து, முஸ்லிம்கள் மத்தியில் பகைமையை உருவாக்கி , அதன் மூலம் அரசியல்நடத்தும் கட்சி பாஜக என்று எங்களுக்கு எதிரான கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பரவலாக காணப்படும் இந்தகுழப்பத்தை முறியடிக்க முஸ்லிம்களால்தான் முடியும். இந்த முயற்சி தில்லியிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

நாங்கள் ஆட்சியமைக்க விரும்பினால், அந்த அரசு நீதி மற்றும் மனிதாபிமானம் மீதுதான் அமையும். நாட்டில் பல முறை கலவரங்கள் நடந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நடக்கவில்லை என யாரும் சொல்ல முடியுமா? ஏராளமான கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் நடைபெற்றிருக்கின்றன என உறுதியாக கூறமுடியும்.

பல மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? அப்படி இருக்கையில், பா.ஜ.க கலவரத்தை தூண்டிவிடுகிறது என எப்படி சொல்லமுடியும்? என கேள்வி எழுப்பினார்?.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...