காமன்வெல்த் போட்டி ஊழல்தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளதை போன்று , பிரதமர் நியமித்த சுங்லு கமிட்டி குற்றம் சுமத்திய முதல்வர் ஷீலா தீட்சித்தின் மீதும நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.,வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து காங்கிரஸ் எம்பி. சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப் பட்டுள்ளதை பா.ஜ.க் வரவேற்கிறது.
இருப்பினும் , காமன்வெல்த் போட்டி ஊழல்குறித்து பிரதமர் நியமித்த சுங்லுகமிட்டி, ஷீலா தீட்சித்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், அந்த அறிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஷீலா தீட்சித் அரசுக்கும் முறை கேடுகளுக்கும் தொடர்புள்ளது என்பதை அந்த கமிட்டி ஆதாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது .ஆனால் அவர் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? சுங்லு கமிட்டி, யார் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்கள் யாராகயிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். அவர் கொடுத்த உறுதிமொழியை அவரே மீறிவிட்டார். என்று கூறினார்
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.