ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடைய இடைத்தரகரை கைதுசெய்யுங்கள் என தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சரத்யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் (ஜீரோ ஹவர்) அவர் பேசியதாவது; ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகரை கைதுசெய்வதன் மூலம் எதிர் காலத்தில் இதை போன்ற முறைகேடுகள் நிகழா வண்ணம் தடுக்கமுடியும். இந்த விவகாரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் உரியவகையில் கையாளவில்லை,
பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியைத் தக்கவைத்து கொள்வதிலும், தன் மீதான நல்லெண்ணத்தை காப்பாற்றிக்கொள்வதிலுமே குறியாக இருக்கிறார் . இந்தபேரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றது யார் என்பதை அரசு கண்டு பிடிக்காமல், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்து விட்டு, வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டு விட்டது என குற்றம் சுமத்தினார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.